search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிற்கிறேன்"

    சுரண்டப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, துன்புறுத்தப்பட்ட மக்களுடன் வரிசையில் நான் கடைசியாக நிற்கிறேன் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi
    புதுடெல்லி:

    ‘காங்கிரஸ் முஸ்லிம்களின் கட்சி’ என்று அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக சர்ச்சை எழுந்து உள்ளது.

    இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று அவர் டுவிட்டரில் உருக்கமான கருத்து வெளியிட்டார்.

    அதில் அவர், ‘‘சுரண்டப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, துன்புறுத்தப்பட்ட மக்களுடன் வரிசையில் நான் கடைசியாக நிற்கிறேன். அவர்களுடைய மதமோ, ஜாதியோ, நம்பிக்கையோ எனக்கு பெரிது அல்ல. வலியில் உள்ளவர்களை அரவணைத்துக்கொள்ள தேடுகிறேன். வெறுப்புணர்வையும், அச்சத்தையும் நான் அழிக்கிறேன். வாழும் எல்லா உயிர்களையும் நான் நேசிக்கிறேன். நான்தான் காங்கிரஸ்’’ என கூறி உள்ளார்.

    ராகுல் காந்தியின் இந்தக் கருத்து குறித்து பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘‘அவர் (முஸ்லிம் கட்சி காங்கிரஸ் என கூறிய) தனது கருத்தை மறுக்கவும் இல்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை. மறுக்கவில்லை என்பதைவிட அவரது டுவிட்டர் கருத்தை ஒப்புக்கொள்ளுதல் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிட்டார். 
    ×