search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுத்தி"

    • காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    • ட்டார காங்கிரஸ் கமிட்டியினர்ஆற்றூர் சந்திப்பில் நேற்று மாலை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    கன்னியாகுமரி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிபோனது. இதையடுத்து ராகுல்காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

    இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியினர்ஆற்றூர் சந்திப்பில் நேற்று மாலை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். ஆற்றூர் நகர தலைவர் ஜாண் வெர்ஜின் முன்னிலை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ஜாண் இக்னோஷிஸ், மாவட்ட செயலாளர்கள் ஆற்றூர் குமார், தங்க நாடார், வட்டார செயலாளர்கள் வக்கீல் ராஜேஸ், ராஜாதாஸ், செறுகோல் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அச்சுதன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    பொன்மனை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பொன்மனை சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். பேரூராட்சி விவசாய பிரிவு தலைவர் வினு, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ஜாண் போஸ்கோ, ஓ.பி.சி. பிரிவு தலைவர் அபினேஷ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனிஷ் ராஜ், வார்டு தலைவர் சுஜின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். திங்கள்நகர் காமராஜர் பஸ் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

    குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கி ணைப்பாளர் லாரன்ஸ், குமரி கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ஜாண் சவுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். மேலும் திங்கள் நகர் பேரூர் துணை தலைவர் ரீத்தம்மாள், ரீத்தாபுரம் பேரூராட்சி துணை தலைவர் விஜூமோன், தக்கலை ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா, ஜேக்கப் அருள்பால், தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் நகர தலைவர் சந்திரசேகர் தலைமையிலும், பீச் சந்திப்பில் மாவட்ட மீனவர் காங்.தலைவர் ஸ்டார்வின் தலைமையிலும் பட்டாசு வெடித்து இனிப் புக்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயல் தலைவர் முனாப், மாநில செயற்குழு உறுப்பி னர் யூசுப்கான், கவுன்சிலர் ரமேஷ், மாநில மீனவர் காங்.துணைத்தலைவர் பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோபி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
    • அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி பஸ் நிலையத்தில் 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வெளியூரில் பணிக்கு செல்லும் சிலர் பேருந்து நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

    நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவின்படி, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் துப்புரவு பணி மேற்பார்வையாளர் பழனிச்சாமி மற்றும் பணியாளர்கள் பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு பூட்டு போட்டனர்.

    அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பப்பட்டனர். மீண்டும் வாகனங்கள் நிறுத்தும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×