search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாக இயக்குனர்"

    நிர்வாக இயக்குனருக்கு டாக்டர் பட்டம்

    நாகர்கோவில், செப்.30-

    பார்வதிபுரத்தில் அமைந் துள்ள கிருஷ்ண குமார் எலும்பு சிகிச்சை மருத்துவ மனையின் நிர்வாக இயக்கு னரும், மூத்த அறுவை சிகிச்சை நிபுணரு மான டாக்டர் கிருஷ்ண குமாரின் மருத்துவம் மற்றும் கல்வி, தொழில் சார்ந்த செயல் பாடுகளை அங்கீக ரித்து, கவுரவப்படுத்தி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்க லைக்கழகம் கவுரவ பேராசிரியர் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

    பட்டம் பெற்ற டாக்டர் கிருஷ்ணகுமாருக்கு சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ மனை ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • திருப்பூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ராஜன் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
    • திருமுருகன்பூண்டி நகராட்சி அதிக வருவாயை ஈட்டி தருவதால் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

    அனுப்பர்பாளையம்:

    திருமுருகன்பூண்டி பேரூராட்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, நகராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் நகராட்சி பணிகளில் தொய்வு ஏறபட்டுள்ளதாகவும், நகராட்சி பகுதியில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 14-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகராட்சி தலைவர் குமார் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித்துறை நிர்வாக இயக்குனர் பொன்னையனை சென்னையில் சந்தித்து நகராட்சிக்கு தேவையான வசதிகள் குறித்து கோரிக்கை மனு வழங்கி இருந்தார்.

    இந்த நிலையில் திருப்பூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ராஜன் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி தலைவர் குமார், துணைத்தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள் ராஜன், யுவராஜ், மதிவாணன், சுப்பிரமணியம், நடராஜ் உள்பட மேலும் ஒரு சில கவுன்சிலர்கள் கலந்து கொண்டு நகராட்சிக்கு நிரந்தர கமிஷனர், அதிகாரிகள் நியமனம், சாலை, குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சாக்கடை கால்வாய் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து அடுக்கடுக்காக இயக்குனர் ராஜனிடம் கோரிக்கைகளாக வைத்தனர்.

    மேலும் திருமுருகன்பூண்டி நகராட்சி அதிக வருவாயை ஈட்டி தருவதால் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 28 நகராட்சிகளிலும் இந்த பிரசசினை இருப்பதாகவும், அடுத்த சனிக்கிழமைக்குள் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

    • நகராட்சியில் நடந்து வரும் குப்பைகள் சேகரிக்கும் பணிகளை நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வின் போது ஆணையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    களக்காடு:

    களக்காடு நகராட்சியில் நேற்று நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.

    அவர் நகராட்சியில் நடந்து வரும் குப்பைகள் சேகரிக்கும் பணி, உரகிடங்கு பணிகள், மாணிக்கம் குளத்தில் தூர்வாரப்பட வேண்டிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவருடன் ஆணையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு உள்பட பலர் சென்றனர்

    • நகர்ப்புற வறுமையானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
    • பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சி மற்றும் காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

    ஆய்வு குறித்து அவர் கூறியதாவது:-

    சமூகத்தில் அனைத்து பிரிவினரையும் பொருளாதார ரீதியான வாய்ப்புகள் சென்றடைய நகர்ப்புற பகுதிகளில் நிலையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் அவசியமாகும். மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துவதும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பாதகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கடமையாகும்.

    நகர்ப்புற வசிப்பிடங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மக்கள் சிறப்பாக வாழ தகுதியான சூழ்நிலையை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புற வறுமையானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அரசு தற்போது பல்வேறு கொள்கைகளை வகுத்து மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு உட்கட்டமைப்பு வளர்ச்சிகள் மேற்கொள்வது உள்பட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    காங்கயம் நகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.13 கோடியே 66 லட்சம் மதிப்பிலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சத்தில் நடைபெற்று வரும் புதிய வளர்ச்சித்திட்டப்பணிகள், வெள்ளகோவில் நகராட்சியில் கலைஞரின் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 81 லட்சத்தில் நடைபெற்று வரும் வாரச்சந்தை மேம்படுத்தும் பணிகள், உப்புப்பாளையத்தில் ரூ.30 லட்சத்தில் குளம் சீரமைக்கும் பணி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் பூங்கா அமைக்கும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் தாராபுரம் நகராட்சி, உடுமலை நகராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர்கள் மோகன்குமார் (வெள்ளகோவில்), வெங்கடேசன் (காங்கயம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×