search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய் தாக்குதல்"

    மர்ம நபர் நாயை கூவம் ஆற்றில் மூழ்கடித்து கொன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவுகிறது.

    ராயபுரம்:

    போரூரை சேர்ந்தவர் மகாதேவன். விலங்குகள் நல அமைப்பை நடத்தி வருகிறார். இவர் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    அதில், மூலகொத்தளம் சுடு காட்டில் மர்ம நபர் ஒருவர் நாய் ஒன்றை கொடூரமாக தாக்கி காலில் துணியை கட்டி ரோட்டில் தரதரவென இழுத்து வந்துள்ளார்.

    பின்னர் கூவம் ஆற்றில் நாயை மூழ்கடித்து கொன்று வீசி உள்ளார். மர்ம நபர் நாயை கொன்று வீசும் வீடியோ எங்களுக்கு கிடைத்தது. எனவே அவரை கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    மேலும் மர்ம நபர் நாயை கொடூரமாக அடித்து கொல்லும் வீடியோவையும் ஆதாரமாக போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அந்த மர்ம நபர் யார்? என்று விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே நாயை கொடூரமாக கொல்லும் வீடியோ சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.

    ஆத்தூர் அருகே உள்ள பழையகாயலில் மீனவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
    ஆறுமுகநேரி

    ஆத்தூர் அருகே உள்ள பழையகாயல் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜா. மீனவர். இவரது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஆக்னஸ். நேற்று ஆக்னஸ் மனைவி வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற ராஜா வளர்த்து வரும் நாய், ஆக்னஸ் மனைவியை தாக்கியுள்ளது. 

    இதில் ராஜாவுக்கும், ஆக்னசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆக்னஸ், அவரது நண்பர்களான நீரோன், தேரடிமுத்து ஆகியோருடன் சேர்ந்து ராஜாவை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேரடிமுத்து, நீரோன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். ஆக்னசை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×