என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நாட்டு வெடிகுண்டுகள்"
- கைது செய்யப்பட்ட சதீஷ், ராகுல் ஆகியோர் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- களக்காடு, திருக்குறுங்குடி, பணகுடி பகுதிகளை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், திருக்குறுங்குடி வனசரகர் யோகேஷ்வரன் தலைமையில் வனத்துறை தனிப்படையினர் பரிவரிசூரியன் பீட், கரும்பாறை சரகம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சதீஷ்(வயது 42), ராகுல்(23) ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்கள் 2 பேரிடமும் வனத்துறையினர் விசாரித்தனர். அதில் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பழத்தில் மறைத்து வீசியது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 3 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ், ராகுல் ஆகியோர் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக களக்காடு, திருக்குறுங்குடி, பணகுடி பகுதிகளை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே அந்த கும்பலுக்கு நாட்டு வெடிகுண்டுகள் எப்படி கிடைத்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனசரகர் யோகேஷ்வரன் கூறுகையில், 'வன உயிரினங்களை வேட்டையாடுவது, கறிகளை விற்பனை செய்வது, அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைவது, வனத்தில் தீ வைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வன பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய கும்பல் குறித்து தகவல் கிடைத்தால் பொதுமக்கள் களக்காடு துணை இயக்குனர் அலுவலகத்திலோ, திருக்குறுங்குடி வனசரகர் அலுவலகத்திலோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும்' என்றார்.
- வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளின் உதிரி பாகங்களை வைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- இதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டி நேஷனல் கலாசாலை பள்ளித்தெருவில் நேற்று நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அங்கிருந்த வீடுகளின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
அடுத்தடுத்து 6 வீடுகளின் மீது இந்த வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் வெடிகுண்டு வீசிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவத்தில் பலரது வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. சாலையில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டதுடன் கரும்புகையாக காணப்பட்டது. இப்பகுதியில்தான் தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வனின் வீடு உள்ளது. வெடிகுண்டு சத்தம் கேட்டு அவரும் குடும்பத்தினருடன் எழுந்து வெளியே வந்து விசாரித்தார்.
மேலும் இது குறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு ஏ.எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளின் உதிரி பாகங்களை வைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக வெடிகுண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெற்று வரும் நிலையில் இப்பகுதியில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசிய நபர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கிய 24 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர்களை வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள வாணிப்புத்தூர், காளியூர் மற்றும் கெம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் நேற்று பங்களாப்புதூர் போலீசார் ரோந்து ஈடுபட்டு வந்தனர்.
அப்போது டி.ஜி.புதூர்-கே.என்.பாளையம் சாலையில் உள்ள காளியூர் பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் சென்றபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் நின்றிருந்த கே.என்.பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த வேட்டையன் (50) மற்றும் நாராயணன் (58) ஆகிய இருவரும் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் விரட்டிய போது, அருகில் வந்தால் நாட்டு வெடியை வீசி கொன்று விடுவோம் என்று போலீசாரை பார்த்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தப்பியோட முயன்ற இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், இருவரும் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை அச்சுறுத்தவும், காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கும், அவுட்காய்கள் எனப்படும் நாட்டுக்காயை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நான்கு நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, வேட்டையன், நாராயணன் ஆகிய இருவர் மீதும் கொலை மிரட்டல், வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இதேபோல் புளியம்பட்டி பகுதியிலும் நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. மொத்தம் 24 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்தது தெரிய வந்தது.
இதுபோன்ற சட்ட விரோதமாக வெடிபொருட்கள் வைத்திருப்பவர்கள் சம்பந்தமாக புகார் அளிக்க விரும்புபவர்கள் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னிடம் நேரடியாகவோ, அல்லது தனது வாட்ஸ்அப் எண் 9655220100 என்ற எண்ணுக்கும் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் காவல் அலுவலகத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தெரிவிக்கலாம். இதுகுறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் கொடுப்பவரின் பெயர் முகவரி ரகசியமாக வைக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
- திண்டிவனம் அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் சிக்கிய வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பூத்துறை கிராமம் உள்ளது. இந்த கிராமம் புதுவை மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பூத்துறை கிராமம் உள்ளது. இந்த கிராமம் புதுவை மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வனப்பகுதிகள் அதிகம் உள்ளது. எனவே இந்த பகுதியில் உடும்பு, ஆமை ஆகியவை இரவு நேரங்களில் உலா வருகிறது. இந்த ஆமை களை அந்த பகுதியில் உள்ள நரிக்குற வர்கள் வேட்டையாடி வருகின்றனர். நேற்று இரவு அந்த பகுதியில் மர்ம நபர்கள் 2 பேர் நடமாட்டம் உள்ள தாக திண்டிவனம் வனத்துறை யினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் வனத்துறை–யினர் அங்கு விரைந்தனர். அப்போது 2 வாலிபர்கள் சந்தேகப் படும்படி திரிந்த–னர். உடனே வனத்துறை–யினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை போட்ட போது, அதில் 19 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. இதனை வனத்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் வில்லியனூரை சேர்ந்த முத்து (வயது 21), புதுவை மாநிலம் ஒழிந்தியாம்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்க டேசன் (21) என்பது தெரிய வந்தது. உடனே 2 பேரும் ஆேராவில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எதற்காக வெடி–குண்டுகள் கொண்டு வந்தனர். எங்கிருந்து வாங்கி வந்தனர். 2 பேரும் கூலி படையினரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்