search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவிலில் கனமழை"

    நாகர்கோவிலில் நேற்று காலையில் இடி மின்னலுடன் 3 மணி நேரம் கனமழை பெய்தது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று காலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல அதிகரித்து சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது.

    இடைவிடாது பெய்த கன மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்கள் சென்றவர்கள் தண்ணீரில் சிக்கி தவித்தனர். செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம் சாலை, கோர்ட்டு ரோடு, கே.பி. ரோடு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் அதிகமாக ஓடியது. அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது.

    காலையில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவ–மாணவிகள் கடும் மழையால் பாதிக்கப்பட்டனர். பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்கள் நடுவழியில் பழுதாகி நின்றதால் மாணவ–மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். ஒரு சிலர் பள்ளி வரை நனைந்தவாறு சென்றனர். 3 மணி நேரத்தில் 26.2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதுபோல், குருந்தன்கோடு, குளச்சல், சிற்றார், பாலமோர் போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது.

    மழையோர பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு அணைகள் நிரம்புவதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்:–

    நாகர்கோவில்–26.2, குருந்தன்கோடு–25.6, குளச்சல்–6.4, பேச்சிப்பாறை –1, சிற்றார்1–4, சிற்றார்2–7, மாம்பழத்துறையாறு –3, கன்னிமார்–4.6, பாலமோர் –2.8, ஆணைகிடங்கு –3, அடையாமடை –8, திற்பரப்பு–9.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 482 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 657 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 27 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது.
    நாகர்கோவில் பகுதியில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னியாகுமரி அருகே மயிலாடியில் 11 மி.மீ.மழை பதிவாகி இருந்தது.

    நாகர்கோவில் பகுதியில் இன்று காலை வெயில் அடித்தது. பகல் 12 மணி அளவில் திடீரென சீதோஷ்ணம் மாறியது. வானில் கருமேகங்கள் திரண்டன. இரவாகி விட்டதோ என்றும் எண்ணும் அளவுக்கு நகரம் இருளில் மூழ்கியது.

    வானம் இருண்டு காணப்பட்ட சிறிது நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது. அது மெல்ல, மெல்ல தீவிரம் அடைந்தது. அப்போது இடியும் மின்னலும் காணப்பட்டது. அதோடு சூறாவளி காற்றும் சுழன்றடித்தது.

    இம்மழை காரணமாக நாகர்கோவில் நகரில் மீனாட்சிபுரம் சாலை, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டார், செட்டிக்குளம் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. கோட்டார் பகுதியில் மழை வெள்ளத்துடன் கழிவுநீரும் கலந்து ஓடியது.

    இந்த திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருச்சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி தவித்தனர். கனரக வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி மழை வெள்ளத்தில் மிதந்து சென்றது. மழை வெள்ளத்தில் சிக்கி பல வாகனங்கள் நடுரோட்டில் நின்றுவிட்டன. இதனால் நகரின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    நாகர்கோவிலில் பெய்த மழை போல கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், மயிலாடி, கொட்டாரம், சாமிதோப்பு, தென்தாமரைகுளம் பகுதிகளில் இன்று பகல் 11.30 மணி முதலே கனமழை பெய்தது.

    இதுபோல குமரி மேற்கு மாவட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மார்த்தாண்டம், குழித்துறை, திருவட்டார், குலசேகரம்,பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார், கன்னிமார், பூதப்பாண்டி, கடுக்கரை, தெரிசனங்கோப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களிலும் சூறை காற்றுடன் கன மழை பெய்தது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான அனைத்து கடற்கரை கிராமங்களிலும் இந்த மழை பெய்தது.

    ×