search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவ்ஜோத்சிங் சித்து"

    தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் கமி‌ஷன் நவ்ஜோத்சிங் சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து இன்று உத்தரவிட்டது. #Loksabhaelections2019 #NavjotSinghSidhu
    புதுடெல்லி:

    இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து. இவர் பா.ஜனதா கட்சியில் எம்.பி. ஆக இருந்தார். அதில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். தற்போது இவர் பஞ்சாப் மாநிலத்தில் மந்திரியாக இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 15-ந்தேதி பீகார் மாநிலம் கத்திகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மதத்தின் பெயரால் ஓட்டு கேட்டு மக்களிடம் பிரசாரம் செய்தார். இது தேர்தல் விதிமுறை மீறல் என தேர்தல் கமி‌ஷனிடம் புகார் செய்யப்பட்டது.


    அது குறித்து விசாரணை நடத்திய தேர்தல் கமி‌ஷன் நவ்ஜோத்சிங் சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து இன்று உத்தரவிட்டது.

    இன்று காலை 10 மணி முதல் அறிக்கைகள் வெளியிட கூடாது. பிரசாரம் எதுவும் செய்யக் கூடாது என தேர்தல் கமி‌ஷன் அறிவுறுத்தியுள்ளது. #Loksabhaelections2019 #NavjotSinghSidhu
    இம்ரான் கான் பதவியேற்பில் பங்கேற்ற சித்துவின் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக இந்து அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. #NavjotSinghSidhu
    லக்னோ:

    பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் சமீபத்தில் பதவியேற்றார்.

    இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து மட்டுமே பங்கேற்றார். கபில்தேவ், கவாஸ்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

    இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற சித்து அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டி தழுவினார். இதுமிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பஞ்சாப் முதல் மந்திரி அம்ரீந்தர் சிங்கும் இதற்கு கண்டனம் தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி தழுவியதை சித்து தவிர்த்திருக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.

    பா.ஜனதாவினர் சித்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவரது கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இம்ரான் கான் பதவியேற்பில் பங்கேற்ற சித்துவின் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக இந்து அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரிய பஞ்ரங் தளம் கட்சியின் ஆக்ரா பிரிவு தலைவர் சஞ்சய் ஜாட் இதுதொடர்பாக கூறியதாவது:-

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் சித்து பங்கேற்றதன் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டார். அவரது தலையை யாராவது வெட்டிக் கொண்டுவந்தால் அவருக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதற்கிடையே பீகார் மாநிலத்தில் சித்துவுக்கு எதிராக கோர்ட்டில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது. #NavjotSinghSidhu
    பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் நாளை பதவியேற்க உள்ள நிலையில், இந்த விழாவில் பங்கேற்க பஞ்சாப் மந்திரியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து பங்கேற்க உள்ளார். #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்- இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள், மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது. அந்நாட்டின் பிரதமராக இம்ரான் கான் நாளை பதவியேற்க உள்ளார். 
     
    இந்த பதவி ஏற்பு விழாவுக்காக இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், கவாஸ்கர், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இம்ரான்கானின் அழைப்பை சித்து ஏற்று, இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார்.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு நல்லெண்ண தூதராக நான் பாகிஸ்தான் செல்ல உள்ளேன். எனது பயணத்தின் மூலம் இரு நாடுகளிடையே உள்ள உறவு மேம்படும் என நான் நம்புகிறேன் என அவர் வாஹா - அட்டாரி எல்லையில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். 
    ×