search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவீன வசதிகள்"

    • முதலுதவி அறை, மின்வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றலாம்
    • கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் புதிய பஸ் நிலையம் நவீன மயமாக்களுடன் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு 12.02.2020 அன்று பூஜை போடப்பட்டு 2 ½ ஆண்டுகளுக்கு பின் தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.53 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 9.25 ஏக்கர் பரப்பளவில் 2 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் மொத்தம் 84 பஸ்கள் நிற்க முடியும். இதன் முகப்பு கட்டிடத்தில் 82 கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    வெளியில் 1450 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்கிங் வசதி, பஸ் நிலையம் பின்புறம் உள்ள அடுக்குமாடி கார் பார்க்கிங்கில் 300 கார்கள் வரை நிறுத்த முடியும். பஸ் நிலையத்தின் குடிநீர் தேவைக்கு ஆர்.ஓ. பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 500 லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பு செய்ய முடியும்.

    பஸ் நிலைய தண்ணீர் தேவைக்காக காவேரி கூட்டு குடிநீர் திட்டம், பாலாறு குடிநீர் மற்றும் பஸ் நிலையத்திலேயே உள்ள கிணற்று நீரையும் பயன்படுத்த உள்ளனர்.

    மேற்கு பக்கம் 2 நுழைவு வாயில், கிழக்கு பக்கம் 2 நுழைவு வாயில் உள்ளது. பஸ் நிலையத்தின் மொத்த மின் தேவை 200 கிலோ வாட் ஆகும். இதில் ஒரு சிறிய குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை சோலார் போர்டு மூலம் பெற உள்ளனர். மின் சிக்கனத்திற்க்காக முழுவதும் எல்.இ.டி பல்புகள் பயன்படுத்தப்பட உள்ளது. முகப்பு கட்டிடத்தின் இரண்டு பக்கமும் 2 லிப்டுகள், 4 படிக்கட்டுகள் உள்ளது. 4 உயர் கோபுர விளக்குகள் உள்ளன.

    பஸ் நிலையம் முழுவதும் 24 சி.சி.டி.வி. கேமிராக்ள் பொறுத்தப்பட்டுள்ளன.

    மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது.

    24 மணி நேரமும் இயங்கும் முதலுதவி அறையும் உள்ளது. தாய்மார்கள் பாலுட்டும் அறை, பயணிகள் ஓய்வு அறை, டிரைவர்கள் ஓய்வு அறை, காவல் கண்காணிப்பு கோபுரங்கள், 7 கழிவறைகள் உள்ளது. மேலும் பஸ் நிலையை மழை நீர் வெளியேறி பூமிக்கு அடியில் சேமிக்கும் வகையில் 2 மீட்டர் ஆழத்துக்கு வடிகால் அமைப்பு ஏற்படுத்த ப்பட்டுள்ளது.

    கழிவு நீர் வெளியேற 250 மீட்டர் தொலைவிற்க்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்ப டுத்தப்பட்டுள்ளது. கழிவு நீர்கள் முத்துமண்டபம் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரித்து மறு சுழற்சி செய்யப்படும். பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு அரசு மதிப்பீடு தயார் செய்து வருவதாகவும் விரைவில் பொது ஏலம் விட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ×