search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலவழித்துறை"

    • இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமைதாங்கி திறந்து வைத்தார்.
    • டாக்டர்.சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நிரவியில் இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி. நிறுவ செயல் இயக்குனராக உதய்பாஸ்வான் கடந்த 1-ந் தேதி பதவியேற்றுகொண்டார். தொடர்ந்து, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், எக்கோ கார்டியோகிராம் எந்திரம் போதுமானதாக இல்லை யென்பதை அறிந்து, ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் எக்கோ கார்டியோகிராம் எந்திரம் ஒன்று புதியதாக நிறுவப்பட்டது. இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமைதாங்கி திறந்து வைத்தார்.

    மேலும், ஆஸ்பத்திரியின் முதல் மாடியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயன்பெறும் வகையில் தனிஅறை அமைக்கப்பட்டு அதையும் கலெக்டர் குலோத்துங்கன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர். மதன்பாபு, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர்.சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

    • கடந்த சில நாட்களாக அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுடன் கூடிய புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.
    • கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலங்களில் இயல்பாக வரக்கூடிய ஒரு வகை காய்ச்சல்தான்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் சிவராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் மாவட்டம் முழுவதும், கடந்த சில நாட்க–ளாக அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுடன் கூடிய புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிக–மாகக்காணப்படுகிறது. முக்கியமா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தக் காய்ச்சல் வழக்க–மாக பருவநிலை மாற்றத்தினால் வரக்கூடிய காய்ச்சல்தான். இந்த காய்ச்சல் நம் மாவட்டத்தில் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களிலும் பரவ–லாக காணப்படுகிறது. கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலங்களில் இயல்பாக வரக்கூடிய ஒரு வகை காய்ச்சல்தான். எனவே, பொதுமக்கள் யாரும் இந்த காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை.

    இந்த காய்ச்சல் 4 அல்லது 5 நாட்களில் தானாகவே சரியாகக் கூடியது. இருப்பினும் அதிகப்படியான காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனை, டாக்டரை அணுகி சிகிச்சைப் பெற வேண்டுகிறோம். சுய மருத்துவத்தை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மேலும், வைரஸ் கிருமி–கள் நம் சுவாசப் பாதையில் நுழையாமல் இருக்க, அனைவரும் முகக் கவசம் அணிவது அவசியம். மேலும் கைகளை சோப்புப் போட்டு கழுவவும், சுத்த–மான உணவுப் பொருட்களை சூடாக உட்கொள்ளவும் வேண்டும். சுடு நீரை பருகவேண்டும். காய்ச்சல் உள்ள குழந்தைகளை பள்ளிக்கும், பொதுவெளிக்கும் அனுப்ப வேண்டாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×