search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடராஜர் கோவிலில்"

    • சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர்த்திக்கு வருடத்திற்கு 6 முறை மகா அபிஷேகம் நடைபெறும்.
    • ஆவணி மாத மகாபிஷேகம் வருகிற 9-ம் தேதி மகா அபிஷேகம் நடை பெற உள்ளது.

    கடலூர்:

    உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு வருடத்திற்கு 6 முறை மகா அபிஷேகம் நடைபெறும். அதன்படி ஆவணி மாத மகாபிஷேகம் வருகிற 9-ம் தேதி மகா அபிஷேகம் நடை பெற உள்ளது. வருகிற 7-ந் தேதி காலை யில் கணபதி ஹோமம் அன்று மாலை சிகாம சுந்தரி ஆனந்த நடராஜமூர்த்திக்கு அனுக்ஞை பூஜை, 8-ம் தேதி காலையில் நவகிரக ஹோமம், அன்று மாலை ஆசார்யவர்ணம், மது பர்க்கம் அங்குரம், பிரதிசரம், ரக்ஷா பந்தனம், ஸ்ரீதன பூஜை ஆகியவை நடை பெறுகிறது. வருகிற 9-ந் தேதி காலை சுவாமிக்கு விசேஷ ரகசிய பூஜை, சுவாமிக்கு லஷார்ச்சனை கட ஸ்தாபனம், மகா ருத்ர ஜபம், மகா ருத்ர ஹோமம் பின்னர் மகா தீபாராதனை நடைபெறுகிற.

    துய நண்பகல் வஸோர்த் தாரை ஹோமம்ஆகிய வற்றைத் தொடர்ந்து மாலை மஹாபூர்ணாஹீதி, வடுக பூஜை, கன்யா பூஜை, ஸ்வாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, கஜபூஜை, அஸ்வ பூஜை, மஹா தீபாராதனை நடை பெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு கடயாத்ராதானம் புறப்பட்டு, கனகசபையில் ஸ்ரீமந் ஆனந்த நடராஜ மூர்த்தி மற்றும் சிவகாம சுந்தரிக்கு சகல த்ரவ்ய மஹாபிஷேகம் நடைபெறு கிறது. மகாபிஷேக ஏற்பாடு களை கோயில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    ×