search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நஞ்சராயன்குளம்"

    • திருப்பூர் ஊத்துக்குளி அருகே நஞ்சராயன் குளம், 310 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
    • ஆண்டு முழுக்க அரிய வகை பறவைகள் வந்து செல்லும் இக்குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி அருகே நஞ்சராயன் குளம், 310 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஆண்டு முழுக்க அரிய வகை பறவைகள் வந்து செல்லும் இக்குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.பொதுப்பணித்துறை வசமுள்ள இக்குளம், அதிகாரபூர்வமாக வனத்துறை வசம் ஒப்படைப்பதற்கான துறை ரீதியான பணிகள் நடந்து வருகின்றன.

    கடந்த மாதம் பொதுமக்களிடம் இருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சேபனை பெறப்பட்டது. இக்குளத்தையொட்டி சர்க்கார் பெரிய பாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை ஆகிய 3 கிராமங்கள், இக்குளத்தையொட்டி உள்ள குடியிருப்புவாசிகள், தங்களுக்கு குளக்கரை வழியாக பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கடிதம் வழங்கினர். அந்த வகையில் 13 விண்ணப்பங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

    இந்த விண்ணப்பம் தொடர்பாக வனத்துறையினர் கள ஆய்வு செய்து, விதிப்படி அவர்களுக்கு வழித்தடம் வழங்கலாமா, வழித்தட வசதி ஏற்படுத்தி தருவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பது குறித்த அறிக்கையை மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு வழங்கியுள்ளனர். இதையடுத்து அடுத்தக்கட்ட பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நஞ்சராயன் குளத்தின் வடிநிலப்பகுதிகள் பாதுகாப்பற்று கிடக்கின்றன.
    • குளக்கரையில் உள்ள 8.90 ஏக்கர் நிலம் தனியாருக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பில், கோரிக்கை மாநாடு திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, கூலிபாளையம் நால் ரோடு பகுதியில் நடந்தது. மாநாட்டுக்கு தலைமை வகித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் பேசினார்.

    இதில் எம்.பி., சுப்பராயன் பேசுகையில், திருப்பூரின் வரலாற்றில் முக்கிய பங்குவகிக்கும் நஞ்சராயன் குளத்தின் வடிநிலப்பகுதிகள் பாதுகாப்பற்று கிடக்கின்றன. குளத்தை காப்பாற்றி பூங்கா அமைக்கவேண்டும் என்கிற நியாயமான கோரிக்கை வெற்றிபெறும் என்றார்.

    மேயர் தினேஷ்குமார் பேசுகையில், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு ஏற்படுத்தித்தருவோம்,' என்றார். தமிழக அரசு 17வது பறவைகள் சரணாலயமாக நஞ்சராயன் குளத்தை அறிவித்துள்ளது. குளக்கரையில் உள்ள 8.90 ஏக்கர் நிலம், கடந்த ஆட்சி காலத்தில், தனியாருக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. நிலத்தை மீட்டு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்க பிரதிநிதி கிருஷ்ணசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம், கொங்கு மக்கள் தேசிய கட்சி மாநகர செயலாளர் ரவி, இயற்கை கழகம் ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். 

    • நல்லாற்றில் வரும் கழிவுகளால் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
    • மழைபெய்யும் காலங்களில் கழிவுகள் நஞ்சராயன் குளத்துக்கு அடித்துச்செல்லப்படும் அபாயம் உள்ளது.

    அவிநாசி :

    அவிநாசி, திருமுருகன்பூண்டி பகுதிகளை கடந்து வரும் நல்லாறு மாநகராட்சி பகுதியில் நஞ்சராயன் குளத்தில் சேர்கிறது. நஞ்சராயன் குளம் நிலத்தடி நீர் பாதுகாப்பு மையமாக இருந்தாலும் நல்லாற்றில் வரும் கழிவுகளால் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குளத்தை கவனமாக பாதுகாத்து பராமரிக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது. அவிநாசி, பூண்டி பகுதிகளில் இருந்து நல்லாறு வழியாக மாநகராட்சிக்குள் கழிவுநீர் மட்டும் வந்து கொண்டிருந்தது.

    தற்போது திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அவிநாசி ரோட்டை நல்லாறு கடந்து வரும் இடத்தில் குப்பை கிடங்கு உருவாகிவருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்படும் ஓட்டல்கழிவு, உணவு பொருள் விற்கும் கடைகளின் கழிவுகள், கட்டுமான பொருள் கழிவுகள் என பலதரப்பட்ட கழிவுகளும், நல்லாறுக்குள் நேரடியாக கொட்டப்படுகிறது.ஆரம்பத்தில் கரையில் மட்டும் கொட்டிய நிலை மாறி தற்போது ஆற்றுக்குள் கழிவுகளை கொட்டுகின்றனர். இதேநிலை தொடர்ந்தால் மழைபெய்யும் காலங்களில் கழிவுகள் நஞ்சராயன் குளத்துக்கு அடித்துச்செல்லப்படும் அபாயம் உள்ளது.

    • பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நம் நாட்டின் இமயமலை பகுதிகளில் காணப்படும் நீலவால் பஞ்சுருட்டான் பறவைகள் திருப்பூர் நஞ்சராயன் குளத்துக்கு வலசை வந்துள்ளன.
    • நீலவால் பஞ்சுருட்டான் பறவைகள், பெரிய அளவு சிட்டுக்குருவி போல இருக்கும்.

    திருப்பூர்:

    குளிர் பிரதேசங்களில் வசிக்கும் பறவைகள், அக்கால நிலையை சமாளிக்க ஏதுவாக மிதவெப்ப மண்டல நாடுகளுக்கு வலசை செல்கின்றன. அவ்வகையில், பல்வேறு நாடுகளில் இருந்தும் பறவைகள் திருப்பூர் நஞ்சராயன் குளத்திற்கு வருகின்றன. தற்போது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நம் நாட்டின் இமயமலை பகுதிகளில் காணப்படும் நீலவால் பஞ்சுருட்டான் பறவைகள் திருப்பூர் நஞ்சராயன் குளத்துக்கு வலசை வந்துள்ளன. இது குறித்து திருப்பூர் இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:-

    நீலவால் பஞ்சுருட்டான் பறவைகள், பெரிய அளவு சிட்டுக்குருவி போல இருக்கும். தேனீ, தட்டான் பூச்சி போன்ற சிறு பூச்சியினங்களை மட்டுமே இவை உட்கொள்ளும். உறைபனியில் இருந்து தற்காத்துக் கொள்ள, முதல் ஆறு மாதங்கள் உடலில் கொழுப்பை சேர்க்கும். அதன் பின், நெடுந்தொலைவு பயணத்தை துவக்கி திருப்பூர் வந்து சேர்கின்றன.

    இங்கு ஓய்வெடுத்து, இளைப்பாறி விட்டு மார்ச் கடைசி வாரத்தில் மீண்டும் தாயகத்துக்கே திரும்பிச் செல்லும். அங்கு சென்ற பின் இனப்பெருக்கம் செய்யும் என்றனர்.

    • வெளிநாடுகளில் இருந்தும் 186 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.
    • 17 வது பறவைகள் சரணாலயமாக கடந்த ஏப்ரல் 11 ந் தேதி நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூா் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் நிருபர்களிடம் கூறியதாவது :- திருப்பூா் மாநகரில் இருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் 125 ஹெக்டா் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. இந்த குளமானது எஸ்.பெரியபாளையம் மற்றும் நெருப்பெரிச்சல் கிராமங்களுக்கு இடையில் உள்ளது. இந்தக் குளத்துக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் 186 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. குளிா் காலங்களில் வெளிநாட்டுப் பறவைகளின் வாழ்விடமாகவும் உள்ளது.

    தமிழகத்தின் 17 வது பறவைகள் சரணாலயமாக கடந்த ஏப்ரல் 11 ந் தேதி நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயம் அமைப்பதற்காக ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பணிகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கையும் தயாா் செய்யப்பட்டுள்ளது. இந்த குளத்தை மேம்படுத்துவதற்காக திருப்பூரில் உள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் நிதி வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனா். இந்தக் குளம் சுற்றுச்சுழல் மையமாகவும், உதகையைப் போல தாவரவியல் பூங்கா அமைத்து சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் மாற்றி அமைக்கப்படும். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பறவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

    நஞ்சராயன் குளத்துக்குச் சொந்தமான இடம் கடந்த ஆட்சியில் விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    ஆய்வின்போது திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் செல்வராஜ், கோவை மண்டல வனப் பாதுகாவலா் ராமசுப்பிரணியம், மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையாளா் கிராந்திகுமாா் பாடி, சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • சைபீரிய பகுதிகளிலிருந்து வலசை வரும் இப்பறவையை கடற்கரை பகுதிகளில் அரிதாகவே பார்க்க முடியும்.உள்நாட்டு நீர் நிலைகளில் பார்க்க முடியாது.
    • உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. இங்கு உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன. இயற்கை ஆர்வலர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து நஞ்சராயன் குளத்தை தமிழக அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது.முதன்முறையாக தடித்த அலகு மண்கொத்தி பறவை நஞ்சராயன் குளத்துக்கு வந்துள்ளது. இதனை இயற்கை கழக உறுப்பினர்கள் கார்த்திகேயன், இளங்கோவன் படம் பிடித்துள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:-

    நஞ்சராயன் குளத்துக்கு முதன்முறையாக தடித்த அலகு மண்கொத்தி பறவை வந்துள்ளது. கோவை மாவட்டத்தில் கூட இந்த பறவை பதிவாகவில்லை. கிழக்கு அமெரிக்கா, கனடா, சைபீரிய பகுதிகளிலிருந்து வலசை வரும் இப்பறவையை கடற்கரை பகுதிகளில் அரிதாகவே பார்க்க முடியும்.உள்நாட்டு நீர் நிலைகளில் பார்க்க முடியாது.

    2022 - 23 குளிர் கால வலசையில் தடித்த அலகு மண்கொத்தி திருப்பூர் வந்திருப்பது சிறப்பு. நஞ்ச ராயன்குளத்தில் இதுவரை உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் மொத்தம் 181 பதிவாகியுள்ளன. வெளிநாட்டு பறவைகள் மட்டும் 45 பதிவாகியுள்ளன.தற்போது வந்துள்ள இந்த பறவை, 2 ,3 மாதங்கள் வரை இங்கேயே தங்கியிருக்குமா அல்லது ஓரிரு நாட்களில் இருந்துவிட்டு கடந்து செல்லப்போகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    நஞ்சராயன் குளத்துக்கு தட்டைவாயன், நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, கிளுவை வாத்துக்கள், சதுப்பு மண் கொத்தி, பொரி மண் கொத்தி, சிறிய பட்டாணி, உப்புக்கொத்தி என ஏராளமான வெளிநாட்டு பறவைகள் ஏற்கனவே வந்துள்ளன.

    • தலா 9நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர் உட்பட 41 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.
    • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 15வது மாநாடு திருப்பூரில் நடந்தது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 15வது மாநாடு திருப்பூரில் நடந்தது.நொய்யல் பண்பாட்டு அமைப்பின் தலைவர் ஜீவானந்தம் பறையிசை அடித்து துவக்கி வைத்தார். சங்க கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் ஏற்றி வைத்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் மாநாட்டை துவக்கி வைத்தார்.

    மாவட்ட தலைவர் கணேசன் கலை இலக்கிய அறிக்கையை முன் வைத்தார். பண்பாட்டு அறிக்கையை மாநில குழு உறுப்பினர் கோவை சதாசிவம், செயல் அறிக்கையை மாவட்ட செயலாளர் குமார், வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் ராமசாமி ஆகியோர் முன் வைத்தனர். தொடர்ந்து தலா 9நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர் உட்பட 41 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.இதில் திருப்பூரில், திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும். கணியாம்பூண்டி முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் அகழாய்வு பணியை துவக்க வேண்டும்.

    திருமுருகன்பூண்டியில் சிற்பத்தொழில் நடக்கும் பகுதியில் சிற்பக்கலை பயிற்சி கல்வி நிறுவனம் ஏற்படுத்த வேண்டும்.கொடுமணல் அகழாய்வு நடந்த இடத்தில் கிடைத்த தொல்பொருட்களை ஈரோடு, சென்னிமலை, காங்கயம் ஆகிய 3 இடங்களில் ஏதேனும், ஒரு பொருத்தமான இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.நஞ்சராயன் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×