search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நக்சல் சுட்டுக்கொலை"

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே இன்று நடைபெற்ற சண்டையில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் உள்ள சின்ஜோ பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் மாநில போலீசை சேர்ந்த சிறப்புப்படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது. அதோடு மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு சிறப்புப்படை போலீசார் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. கார்வா மற்றும் லேட்கார் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. பாதுகாப்பு படையினர், கோப்ரா படையுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

    இந்த சண்டையில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து அங்கு சண்டை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×