search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நக்சலைட்டுக்கள்"

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைக்கு ரூ.40 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட்டுக்கள் 5 பேர் போலீசாரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Naxals
    மும்பை :

    மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் தலைக்கு ரூ.40 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த தம்பதிகள் உள்பட 5 நக்சலைட்டுகள் போலீசாரிடம் சரணடைந்தனர். 

    கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 40 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தலைக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட சாய்நாத், மற்றும் அவரது மனைவி சுமார் 6 தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள்.

    மேலும், போலீசாருக்கு எதிராக 10 துப்பாக்கிச்சூடு சம்பவங்களிலும், 6 கொலைகளில் வழக்குகளில் தொடர்புடையவருமான சுசிலா என்பவரின் தலைக்கு ரூ.6 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

    9 கொலை வழக்குகளில் தொடர்புடையதால் தலைக்கு முறையே தலா ரூ.6 லட்சம் மற்றும் ரூ.4 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த ராஜேஷ் மற்றும் மகேஷ் உள்பட நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த 5 பேர் ஒரே நேரத்தில் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். #Naxals
    ×