search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை"

    • சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகிற 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் கான்சேர் மாவட்டம் கோயாலி பேடா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மறைந்து இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.

    இதில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகிற 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் 2 நக்சலைட்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்லா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர்.
    • சுனிதா, மாவோயிஸ்டுகளின் பிரிவான போராம் தேவ் கமிட்டியின் கமாண்டர் ஆவார். அவர் பகுதி கமிட்டி உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தின் பலங்ஹட் மாவட்டம் கட்லா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    இன்று அதிகாலை, கட்லா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    இதில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் சுனிதா, சரிதா காதியா மோச்சா என்பது தெரிய வந்தது.

    சுனிதா, மாவோயிஸ்டுகளின் பிரிவான போராம் தேவ் கமிட்டியின் கமாண்டர் ஆவார். அவர் பகுதி கமிட்டி உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

    சரிதா பகுதி கமிட்டி உறுப்பினராக இருந்தார். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இவர்களின் தலைக்கு தலா ரூ.14 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்லா வனப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    ×