search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நக்சலைட்கள் கொலை"

    சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைக்கு தலா ரூ.8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்ட இரு நக்சலைட்களை சிறப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். #naxalkilled
    ராய்ப்பூர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். 

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின் மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டம், பலேபேடா காட்டுப் பகுதிக்குள் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பலேபேடா, படாபேன்டா, கங்காலி, பார்பேடா ஆகிய காட்டுப் பகுதிகளிலும் அருகாமையில் உள்ள சில கிராமங்களிலும் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

    நக்சல் ஒழிப்பு படையை சேர்ந்த நான்கு தனிப்பிரிவினர் கடந்த 2-ம் தேதியில் இருந்து அப்பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இன்று காலை சுமார் 6 மணியளவில் பலேபேடா காட்டுப்பகுதியில் தனிப்படையினர் மீது சுமார் 30 நக்சலைட்கள் துப்பாக்கிகளால் சுட்டு அதிரடி தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தலைக்கு தலா ரூ.8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்ட இரு நக்சலைட்களை சிறப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்கள் வைத்திருந்த நவீனரக வெளிநாட்டு தயாரிப்பான தானியங்கி துப்பாக்கி உள்பட 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கொல்லப்பட்டவர்களில் ஒருவன் நாராயண்பூர் மாவட்ட நக்சல் பிரிவின் கமாண்டர் என தெரியவந்துள்ளது. #tamilnews #naxalkilled
    ×