search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி வெட்டி கொலை"

    • முன்விரோதத்தில் நடந்தது
    • தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேனூர் ஊராட்சி கருகப்பூலாம்பட்டியை சேர்ந்தவர் ரங்கையா (வயது 55). தொழிலாளி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுப்பையா மகன் வடிவேலு (35) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 1-ந் தேதி கருகப்பூலாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மஞ்சுவிரட்டு திடலில் ரங்கையா நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வடிவேலு, ரங்கையாவின் கழுத்தில் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரங்கையா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பொன்னமராவதி போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, தப்பியோடிய வடிவேலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மனைவி, 2 மகன்கள் கைது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே மோத்தக்கல் ஊராட்சி க்குட்பட்ட குபேரப்பட்டி ணம் கிரா மத்தை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 58), கூலி தொழி லாளி. இவரது மனைவி அன்னக்கிளி (50). இவர்களுக்கு ராதிகா. அமுதா ஆகிய 2 மகள்களும், மணிகண்டன், சக்திவேல் ஆகிய 2 மகன் களும் உள்ளனர்.

    கொலை

    அனைவ ருக்கும் திருமணமாகி விட் டது. மணிகண்டனுக்கு 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் அவரது மனைவி ஒரு மாதத்திலேயே பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அவர் வேறு ஒருவரை திரும ணம் செய்து கொண்டதாக தெரிகிறது. எனவே தனக்கு 2 - வது திருமணம் செய்து வைக்கும்படி சக்திவேல் வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக தந்தை, மக னுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சகாதேவனை மகன்கள் மணிகண்டன், சக்திவேல் ஆகியோர் கத்தியால்வெட்டி கொலை செய்தனர்.

    இதுகுறித்து தண்டராம் பட்டு போலீஸ் இன்ஸ்பெக் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து 2 மகன்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.மலைப்பகுதியில் ஒரு பெண் கைது செய்து விசாரணை நடத்தினார். இந்தகொலையில் அன்னக் கிளிக்கும் சம்பந்தம் இருப்ப அன்னக்கிளி தாக போலீசாருக்கு தெரிய வந்தது. அவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அன்னக்கிளியும் சேர்ந்து இந்த கொலையை செய்தி ருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. எனவே அவ ரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதா வது, சகாதேவன் சேராப்பட்டு மலைப்ப குதியில் ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்துக்கொண்டு 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தார்.

    மேலும் கள்ளக்காதலிக்கு தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவழித்து வந்ததோடு மலையிலேயே ஒரு வீட்டையும் சகாதேவன் கட்டிக் கொடுத்துள்ளார்.

    வாக்குமூலம்

    இதனால் சகாதேவன் சம்பாதிக்கும் பணத்தை குடும்ப செலவிற்கு கொடுக்காமலும், குடும்பத்தை கவனிக்கா மலும் இருந்துள்ளார்.

    இது தொடர்பாக பலமுறை குடும்பத் தகராறு ஏற்பட்டது. ஆனாலும் சகாதேவன் கள்ளத்தொ டர்பை கைவிடுவதாக இல்லை. மேலும் தங்களுக்கு சொந்தமான நிலத்தையும் கள்ள காதலிக்கு எழுதி வைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து தட்டிக்கேட்ட அன்னக்கிளியும் சகாதேவன் கொடு மைப்படுத்தி வந்துள்ளார்.

    எனவே மனைவி 2 மகன்கள் சேர்ந்து சகாதேவனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். அதன் பேரில் நேற்று முன்தினம் மாலை சகாதேவன் வீட்டில் இருந்தபோது அவரை சராசரியாக வெட்டி கொலை செய்தனர்.இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×