search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடங்குகிறது"

    • காலை 10.45 மணியில் இருந்து 11.45 மணிக்குள் முகூர்த்தக்கால் நடும் விழா
    • தசரா குழு பக்தர்கள் பல வேடங்கள் அணிந்து கோவை மாநகரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது

    கோவை,

    கோவை சங்கனூர்-நல்லாம்பாளையம் ரோடு அன்னியப்பன் வீதி முத்தாரம்மன் நகரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 23 ஆண்டுகளை கடந்து 24-ம் ஆண்டாக இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று(சனிக்கிழமை) இரவு 12 மணிக்கு காளிபூஜையுடன் தொடங்குகிறது.

    அதனை தொடர்ந்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.45 மணியில் இருந்து 11.45 மணிக்குள் முகூர்த்தக்கால் நடும் விழா நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு வருகிற 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு 4 கால பூஜை நடைபெற உள்ளது. மேலும் கோவை தசரா குழு பக்தர்கள் பல, பல வேடங்கள் அணிந்து கோவை மாநகரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10-ம் நாள் திருவிழாவில் தென்காசி மாவட்டம் காசிநாதபுரம் தசரா நாயகி மியுசிக் நாசிக்டோல் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் மதுரை தங்கவேல் குழுவினரின் தசரா சிறப்பு மேளமும், விருதுநகர் காரியாப்பட்டி தங்கம் கரகாட்டக்கலை குழுவினரின் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு முத்தாரம்மன் அருளை பெற்று செல்லுமாறு கோவை தசரா டிரஸ்ட் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

    ×