search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடங்கம்"

    • 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டில் இருந்து முதல் பருவ தேர்வுக்கு பதில், தொகுத்தறியும் திறன் தேர்வு நடத்த உள்ளது.
    • 1000-க்கும் மேற்பட்ட தொடக்க, நடு நிலைப்பள்ளிகளில் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.

    சேலம்:

    அரசு பள்ளிகளில் கல்வி கற்பித்தல், தேர்வு நடத்துதல், ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

    இதன்படி அரசு பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டில் இருந்து முதல் பருவ தேர்வுக்கு பதில், தொகுத்தறியும் திறன் தேர்வு நடத்த உள்ளது. மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப் படையில் பொதுத் தேர்வுக்கு இணை யாக நடத்தப்படுகிறது.

    இன்று முதல் 3 நாட்க ளுக்கு நடத்தப்பட உள்ள தேர்வு கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தேர்வு தொடங்கியது. குறிப்பாக 1000-க்கும் மேற்பட்ட தொடக்க, நடு நிலைப்பள்ளிகளில் 4, 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.

    தேர்வு முடிந்த பின், அதன் மதிப்பீடுகள், கல்வி அமைச்சகத்துக்கு தொகுப்பு அறிக்கையாக அனுப்பப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×