search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவார திருப்புகழ் இன்னிசை"

    • உடுமலை மாரியம்மன் கோவில் கலையரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கரிவலம்வந்தநல்லூர் முருக.சுந்தர ஓதுவா மூர்த்திகள் தேவார திருப்புகழ் இன்னிசை நிகழ்த்தினர்.

    உடுமலை :

    உடுமலை மாரியம்மன் கோவில் கலையரங்கத்தில் தேவார திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் குமார சுவாமிநாத தேசிகர், கரிவலம்வந்தநல்லூர் முருக.சுந்தர ஓதுவா மூர்த்திகள் தேவார திருப்புகழ் இன்னிசை நிகழ்த்தினர். மீனாட்சி சுந்தரம் வயலின், வெங்கடேஷ் பாபு மிருதங்கம், மணிகண்டன் முகர்சிங் இசைத்தனர்.

    நிகழ்ச்சிக்கு ஸ்ரீஅருணகிரிநாதர் இசை விழாக்குழு நிர்வாகிகளான தலைவர் ேக.எல்.ஆர். டெக்ஸ்டைல்ஸ் கைலாசம் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் வி.ஆர்.எஸ்.ஜூவல்லரி கனகராஜன், கலாவதி சிவசண்முகம் முன்னிலை வகித்தனர். செயலாளர் அங்கு பாலசுப்பிரமணியன், துணை செயலாளர்கள் நாதஸ்வர வித்வான் உமாபாலன், தவில் வித்வான் மணிகண்டன், உதயம் காபி பார் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், ஸ்ரீ அருண கிரிநாதர் இசை விழாக்குழு பொருளாளர் ராமகிருஷ்ணன், அர்ச்சுனேஸ்வரர் அறக்கட்டளை யு.கே.பி .முத்துக்குமாரசாமி , டாக்டர் மேகலா பாலசுந்தரம், டாக்டர் தாமரை செல்வன், குணஸ்ரீசிட்ஸ் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கோவில் செயல் அலுவலர் தீபா, கார்த்திகை விழா மன்ற துணை தலைவர் டாக்டர் சுந்தரராஜன், டிராவல்ஸ் நிர்வாக இயக்குனர் நாகராஜ், முன்னாள் நகராட்சி அலுவலர் கந்தசாமி, ஸ்ரீவிஷ்ணு ஜூவல்லரி பாலகிருஷ்ணன், குணா ஜூவல்லரி குணசேகரன், ஜெய்சிங் லிங்கவாசகம், ஆர்.வி.எஸ்.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×