search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்வில்"

    • இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ள முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. 35 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    சேலம்:

    இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ள முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. 35 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 1200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ- மாணவிகள் நீட் தேர்வில் பங்கேற்றனர். அதில் 509 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 6 ேபர், 351-400 வரை 8 பேர், 301-350 வரை 15 பேர், 251-300 வரை 27 பேர், 201-250 வரை 42 பேர், 151-200 வரை 107 பேர், 101 முதல் 150 வரை 211 பேர், 93 முதல் 100 மதிப்பெண்கள் வரை 93 பேர் என 509 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 162 மாணவர்கள் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 92.71சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
    • பிளஸ் 2 தேர்வில் 15 ஆயிரத்து 674 மாணவர்களும் 18 ஆயிரத்து 778 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 452 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு 17500 மாணவர்களும், 19 ஆயிரத்து 661 மாணவிகளும் என மொத்தம் 37, 161 பேர் எழுதினர். இதில் 15 ஆயிரத்து 674 மாணவர்களும் 18 ஆயிரத்து 778 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 452 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    மாவட்டத்தில் மொத்த சதவீத தேர்ச்சி 92.71 சதவீதம் ஆகும். மாணவர்கள் 89.5 7 சதவீதமும் மாணவிகள் 95.51 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கையொட்டி அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 91.52 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    தற்போது அதைவிட 1.19 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மாணவ மாணவிகளின் வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் சுமதி மற்றும் உதயகுமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

    ×