search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் வாகன சோதனை"

    கோவையில் இன்று அதிகாலை தேர்தல் வாகன சோதனையில் 15 கிலோ குட்காவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை வைத்திருந்த திருச்சூரை சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElections2019
    கோவை:

    கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும்படை அலுவலர் கனகராஜ் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை 5 மணி அளவில் காந்திபுரம் பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் 15 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை வைத்திருந்த திருச்சூரை சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் தாமஸ் வீதியில் ஒரு வியாபாரியிடம் இருந்து வாங்கி சென்றதாக கூறினார். இதையடுத்து பறிதல் செய்த குட்கா பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 11-ந் தேதி முதல் இதுவரை எந்த ஆவணங்களும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 83 லட்சத்து 38 ஆயிரத்து 865 பறிமுதல் செய்யப்பட்டது.

    இதில் உரிய ஆவணங்களை 19 பேர் சமர்ப்பித்ததின் அடிப்படையில் ரூ.1 கோடி 6 லட்சத்து 26 ஆயிரத்து 980 மற்றும் 64 பட்டுப்புடவைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

    மீதமுள்ள ரூ.77 லட்சத்து 11 ஆயிரத்து 885 மற்றும் 213 பட்டுப்புடவைகள் சம்பந்தப்பட்ட கருவூலகங்களிலும், 1497 மது பாட்டில்கள் மற்றும் ஒரு ஏர்பிஸ்டல் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களிலும் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  #LokSabhaElections2019

    ×