search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்ச்சி சதவீதம் குறைவு"

    பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. #PlusTwoExamResults #Plus2Result
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 47 ஆயிரம் 461 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 41 ஆயிரத்து 389 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 87.21 சதவீதம் ஆகும்.

    கடந்த ஆண்டு 88.85 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தது. தற்போது காஞ்சீபும் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

    மாவட்ட அளவில் காஞ்சீபுரம் 24-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 23-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அரசு பள்ளியில் மொத்தம் 19 ஆயிரத்து 171 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 14 ஆயிரத்து 769 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 77 சதவீதம்தேர்ச்சி ஆகும்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 43 ஆயிரத்து 866 பேர் தேர்வு எழுதினர். இதில் 38 ஆயிரத்து 255 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 87.17 ஆகும். கடந்த ஆண்டு 87.57 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. தற்போது 0.40 சதவீதம் தேர்ச்சி குறைவு.

    மாவட்ட அளவில் திருவள்ளூர் மாவட்டம் 25-வது இடத்தை பிடித்துள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 90 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் 16 ஆயிரத்து 340 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 944 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 73.10. கடந்த ஆண்டு 74.28 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது.  #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
    ×