search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்"

    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கல்விகடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜோசப் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கவியரசன், மாவட்ட  துணைச் செயலாளர், எழிலரசன்,  தங்கதமிழ்ச் செல்வன், தலைமை செயற்குழு  உறுப்பினர் ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் கலிய மூர்த்தி, ராஜா, மாவட்ட தொண்டரணி ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்பு, நாய், போன்ற விஷகடிகளுக்கு போதிய மருந்துகள் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படுகின்றது. போதிய மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்  என கேட்டுக் கொள்கின்றோம். அரியலூர் மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும் . விவசாய கடன்களையும், கல்வி கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் மத்திய மாநில அரசை கேட்டுகொள்கின்றோம். 

    அரியலூரில் புதிய பேருந்து நிலையம், அமைத்து தர வேண்டும் , அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழுர் ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் மணல் திருட்டு, மணல் கொள்ளைக்கு துணை போகும் அரசு வருவாய்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள், ரயில் பயனிகளின் நலன் கருதி கேன்டீன் வசதியை உடனே துவங்க வேண்டும். அரியலூர் மாவட்ட  கொள்ளிடம் ஆற்றில் கல்லனையிலிருந்து அனைக்கரை வரை மணல் குவாரி அமைக்க அனுமதிக்க கூடாது  உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 

    கூட்டமுடிவில் பொதுக்குழு உறுப்பினர் ராஜா நன்றி கூறினார்.
    ×