search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய மனித உரிமை ஆணைய‌ம்"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து‌ தேசிய மனித உரிமை ஆணைய‌ம் நாளை காலை தூத்துக்குடி வருகிறார்கள். தொடர்ந்து 5 நாட்கள் தங்கியிருந்து விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் சார்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் மூத்த போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 4 பேர் இடம்பெற்று உள்ளனர்.

    அவர்கள் நாளை காலை தூத்துக்குடி வருகிறார்கள். தொடர்ந்து 5 நாட்கள் தங்கியிருந்து விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த குழுவினர் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு, கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிடுகின்றனர். தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொள்கிறார்கள்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு நடந்துள்ளது? துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ன? என்றும் கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள். இந்த சிறப்பு குழுவின் முழுமையான விசாரணை, ஆய்வு முடிந்ததும் அறிக்கை தயார் செய்யப்படுகிறது. அதனை தேசிய மனித உரிமை ஆணையத்தில் சிறப்பு குழு 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கிறது.
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த விசாரணை நடத்துவதற்காக‌ தேசிய மனித உரிமை ஆணைய‌ சிறப்பு குழு இன்று தூத்துக்குடி வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால் மோதல் உண்டானது.

    இதனால் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

    இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த வக்கீல் ஏ.ராஜராஜன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன், டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘தூத்துக்குடியில் நடந்த சம்பவம் தொடர்பாக‌ தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடுமாறு கோரிக்கை வைத்தோம். ஆனால் தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடாமல் தமிழக அரசிடமும், டி.ஜி.பி.யிடமும் அறிக்கை கேட்டு உள்ளது.

    இந்த சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் விரைந்து செயல்படாவிட்டால் மேலும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடரும். போலீசார் தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிட்டு துப்பாக்கி சூடு நடந்த இடங்களை கள ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ‘மனுதாரர் இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைக்கலாம்’ என்று கூறியது. அத்துடன், ‘மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து மனுதாரர் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகி தனது வாதங்களை முன்வைத்தார்.

    அதனை பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், மூத்த போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மூன்று துணை சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களை கொண்டு உண்மை கண்டறியும் குழுவை தேசிய மனித உரிமை ஆணையத்தின் டைரக்டர் ஜெனரல் (புலனாய்வு) அமைக்க வேண்டும். இந்த குழு உடனடியாக தூத்துக்குடிக்கு சென்று, கடந்த 22-ந்தேதி அன்று நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்து களத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    அந்த விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு 2 வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. தூத்துக்குடியில் களஆய்வு நடத்தி ஒரு குழுவை அமைத்து உண்மை நிலையை தெரிவிப்ப‌தாக அறிவித்தது. அதன்படி மனித உரிமை ஆணையம் சார்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் மூத்த போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 4 பேர் இடம்பெற்று உள்ளனர்.

    அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் சென்னை வருகிறார்கள். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகின்றனர். தொடர்ந்து, தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை பார்வையிடுகின்றனர்.

    தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து விசாரணை மேற்கொள்கிறார்கள். துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களையும் அவர்கள் பார்வையிடுகின்றனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு நடந்துள்ளது? துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ன? என்றும் கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள்.

    இதற்காக தூத்துக்குடியில் முகாமிட உள்ளனர். குழுவின் முழுமையான விசாரணை, ஆய்வு முடிந்ததும் ஆய்வு செய்த விவரங்கள், தேசிய மனித உரிமை ஆணையத்தில் 2 வாரங்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    ×