search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய தலைவர் அமித்ஷா"

    எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

    மற்ற கட்சிகளை பொறுத்தமட்டில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற சில கட்சிகள் கூட்டணி அமைத்தும், பல கட்சிகள் தனித்தனியாகவும் களம் கண்டன.

    மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். வருகிற 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போதுதான் ஆட்சி அமைப்பது யார்? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே, தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.



    டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்ற இந்த விருந்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஜி.கே.வாசன்,  சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் விருந்தில் பங்கேற்றனர்.
    பாஜக தேசிய தலைவர் அமித்ஷா காய்ச்சல் பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். #BJP #AmitShah
    புதுடெல்லி:

    மத்தியில் உள்ள பாஜக ஆட்சி இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. அதற்கான வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க பாஜக முழு வீச்சில் வேலை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியினரை தேர்தல் வேலைகளில் ஈடுபடுத்தி வருகிறார்,

    இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. #BJP #AmitShah
    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி எங்கள் கூட்டணியில் நிச்சயம் இருக்கும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #ParlimentElections#Sivasena
    மும்பை:
     
    மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக கூட்டணியில் சிவசேனா கட்சி அங்கம் வகித்து வருகிறது. மகாராஷ்டிராவிலும் அந்த கட்சி கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது. ஆனாலும், சமீப காலமாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசை கூட்டணி கட்சியான சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி எங்கள் கூட்டணியில் நிச்சயம் இருக்கும் எனபாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.



    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மகாராஷ்டிராவின் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூட்டணி கட்சியான சிவசேனா தலைமையுடன் நல்ல உறவில் இருந்து வருகிறார். மத்தியிலும் மாநிலத்திலும் சிவசேனா கூட்டணி வகித்து வருகிறது.

    எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் சிவசேனா கட்சி நிச்சயம் அங்கம் வகிக்கும் என தெரிவித்துள்ளார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தனியாக போட்டியிடுவோம் என சிவசேனா கட்சி அறிவித்திருந்த நிலையில், பாஜக தலைவர் இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AmitShah #ParlimentElections#Sivasena
    காங்கிரஸ் கட்சி தேர்தலுக்காக மட்டுமே அம்பேத்கரை நினைவில் வைத்துள்ளது என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #Ambedkar
    ஜெய்ப்பூர்:

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பிகானீரில் நேற்று நடைபெற்ற எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பொதுக் கூட்டத்தில் தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியாதாவது:

    குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக செயல்படும் கட்சி பா.ஜ.க. அல்ல. இந்த மாநிலத்தில் ஆளும் வசுந்தரா ராஜே சிந்தியா அரசு தாழ்த்தப்பட்டவரர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறது.

    ஆனால், எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வரும் போதுதான் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பற்றியும், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பற்றியும் நினைவுக்கு வரும். ஆட்சியில் அமர்ந்ததும் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள் என குற்றம் சாட்டினார். #AmitShah #Ambedkar
    ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். #BJP #AmitShah
    சென்னை:

    பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக பா.ஜ.க சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அதன் ஒருபகுதியாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார்.

    சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி. தங்க கடற்கரையில், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறுகையில், வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும். 11 கோடி உறுப்பினர்களை பெற்று மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க.வுக்கு 330-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர்.

    தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர். எதிர்ப்பாளர்களே..! தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்பதை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீங்கள் பார்ப்பீர்கள் என ஆவேசமாக பேசினார்.

    பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பின்னர் அமித் ஷா சென்னை விமான நிலையம் சென்றடைந்தார், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை, தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah
    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். #BJP #AmitShah
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை, தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க.வை பொறுத்தவரையில், தமிழகத்தில் 5 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர்களை கண்காணிப்பதற்கு 25 தனி பொறுப்பாளர்கள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய 2,750 பேர் மகா சக்தி கேந்திரா பொறுப்பாளர்களாகவும், 13,056 பேர் சக்தி கேந்திரா பொறுப்பாளர்களாகவும் ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    இவர்கள் தான் அமித்ஷாவின் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள். இவர்களுக்கான அடையாள அட்டைகளும் கொடுக்கப்பட்டு விட்டன. எனவே வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தவிர கூட்டத்துக்கு வெளி ஆட்கள் யாரும் வரமுடியாது.

    அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தையும், எங்களுக்கு உற்சாக ஊக்கத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. ஏனென்றால் பா.ஜ.க. குறித்து நிறைய விமர்சனங்கள் எழுகின்றன. எந்த கட்சியாக இருந்தாலும், அது அடிப்படையிலே வளர்ந்து வரவேண்டியது இயல்பு தான். தேசிய கட்சி ஒன்று தமிழகத்தில் காலூன்றுவது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது.



    காலை 11 மணிக்கு சென்னை வரும் அமித்ஷா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு வி.ஜி.பி. தங்க கடற்கரை சாலைக்கு வருகிறார். பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை எங்கள் உயர் மட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். பிற்பகல் 2 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை உணவு நேரம்.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணி வரை பா.ஜ.க. பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சகோதர இயக்கங்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி சக்தி மற்றும் மகா சக்தி கேந்திரா அமைப்பின் பொறுப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

    இது அமைப்பு ரீதியான ஒரு கூட்டம். இது முழுக்க முழுக்க பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க.வை தயார்படுத்தும் நிகழ்வுக்காக நடைபெறும் முக்கிய கூட்டம். இதில் அதற்கான வியூகங்கள் வகுப்பது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். #BJP #AmitShah
    ×