என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தென்னை மரங்களை"
- 7 யானைகள், 2 குட்டிகளுடன் சுரைக்காய் செடிகளை மிதித்து நாசப்படுத்தியது.
- விளைநிலங்களில் புகுந்து சேதம்படுத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
கோவை:
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் நேற்று இரவு மலைப்பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய யானை கூட்டம் விளைநிலங்களுக்கு புகுந்து பல்வேறு சேதாரங்களை ஏற்படுத்தியது.
விளைநிலங்களுக்குள் புகுந்த 7 யானைகள், 2 குட்டிகளுடன் பழனிச்சாமி என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த சுரைக்காய் செடிகளை மிதித்து நாசப்படுத்தியது. மேலும் அருகிலுள்ள இளங்கோவன் என்பவரது தோட்டத்தில் 25 தென்னை மரங்களையும், கனகராஜ் என்பவரது தோட்டத்தில் 16 தென்னை மரங்களையும், வெள்ளிங்கிரி தோட்டத்தில் 5 தென்னை மரங்களையும் வேரோடு சாய்த்து தள்ளியது.
மேலும் அருகில் இருந்த துறை என்பவரது தோட்டத்தில் உள்ள வீட்டின் கேட்டின் மதில் சுவரை இடித்து தள்ளி மஞ்சள் மூட்டைகளை எடுத்து சூறையாடியது. தொடர்ந்து இந்த பகுதியில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து சேதம்படுத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
வனத்துறையினர் யானைக் கூட்டங்களை விரட்டி மலைப்பகுதிகளுக்கு அனுப்பி விட்டாலும், மீண்டும் ஊருக்குள் புகுந்து விடுகிறது. இந்த நிலையில் சேதாரமான பகுதிகளை வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
அவர்களிடம் அப்பகுதி விவசாயிகள், ஊர் பொதுமக்கள் யானைகள் வருவதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்