search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னை சாகுபடி"

    • மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.
    • வயது வரம்பு தடை இல்லை.

    உடுமலை :

    ஆனைமலை ஆழியாறு நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் 2023 - 24க்கான தொலைதூர கல்வி இயக்ககத்தின் தென்னை சாகுபடி தொழில்நுட்ப படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து ஆழியாறு நகர் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தென்னை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகளில் சேர ஆர்வமுள்ள விவசாயிகள், கல்வித்தகுதி சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் வந்து விண்ணப்பங்களை பெற்று பயிற்சியில் சேரலாம்.6 மாத கால சான்றிதழ் படிப்பு பாடத்தில் மாதம் ஒரு நாள் தென்னையில் பயிர் இனப்பெருக்கம், ரகத்தேர்வு, பயிர் மேலாண்மை ஒருங்கிணைந்த பூச்சி - நோய் மேலாண்மை, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.

    தென்னை சார் தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் சென்று மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் குறித்து நேரடி பயிற்சி அளிக்கப்படும். வயது வரம்பு தடை இல்லை. தமிழ் பேச, படிக்க தெரிந்தவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். கல்வித்தகுதி தேவையில்லை. பயிற்சி கட்டணம் 2,560 ரூபாய்.ஓராண்டு பட்டய படிப்பில் மாதத்துக்கு இருநாட்கள் வகுப்புகள் நடைபெறும். இதில் செய்முறை வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தென்னையில் ரகங்கள் தேர்வு, வீரிய ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி, தென்னை தாவரவியல், திசுவளர்ப்பு முறையில்தென்னங்கன்றுகள் உற்பத்தி, நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

    ஊட்டச்சத்து மேலாண்மை, வறட்சி மேலாண்மை, தென்னை கழிவுகள் வாயிலாக மண்புழு உர தயாரிப்பு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, எதிர் உயிரி உற்பத்தி செய்து பூச்சி நோயை கட்டுப்படுத்துதல், அறுவடை பின் சார் தொழில்நுட்பங்கள், தென்னையில் மதிப்புக்கூட்டுதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.பிளஸ்-2 தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். இரு பருவங்களை கொண்ட ஓர் ஆண்டு படிப்பின் ஒரு பருவத்திற்கான கட்டணம் 10 ஆயிரம் ரூபாய்.

    இங்கு கற்போர், பாடப்பிரிவுகளில்பெறும் பயிற்சியின் வாயிலாக தங்கள் பண்ணைகளிலேயே தென்னையில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்து அதிக லாபம் ஈட்டலாம்.வகுப்புகள் முடிந்ததும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேளாண் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தின் சான்றிதழ் அளிக்கப்படும்.தென்னை வளர்ச்சி வாரியத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெற்று தொழில் முனைவோராகலாம்.

    பயிற்சியில் சேர விரும்புவோர் தென்னை ஆராய்ச்சி நிலையத்தை நேரிலோ அல்லது 82486 99865, 98420 67785 என்ற மொபைல் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 9 முதல் 12 மாத வயது உடைய கன்றுகளை மட்டும் நடவு செய்ய வேண்டும்.
    • 45 நாட்கள் கழித்து காய்பறித்தல் நல்லது.

    உடுமலை :

    தென்னை சாகுபடி செழிக்க, செய்ய வேண்டிய வை மற்றும் செய்ய க்கூடாதவை என்னென்ன என்பது குறித்து, வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி விவசாயிகள் செய்ய வேண்டியவை வருமாறு:- தரமான தாய்மரத்தை தேர்வு செய்ய வேண்டும். சரியான பருவத்தில் கன்றுக ளை நட வேண்டும். ஐந்து மாதத்துக்குள் முளைக்காத கன்றுகளை அகற்றி விட வேண்டும். 9 முதல் 12 மாத வயது உடைய கன்றுகளை மட்டும் நடவு செய்ய வேண்டும்.குழிகளின் பக்கவாட்டில் மண்ணை அகற்றி கன்றுகள் வளர, வளர புதிய மண் இட வேண்டும். மழைக்காலத்தில் கன்றின் அடித்தண்டில் ஒட்டி இருக்கும் மண்ணை அகற்ற வேண்டும். சொட்டுநீர் பாசன முறையை பின்பற்றி நீர் வழியாக உரமிடுதல் நல்லது. மண் சோதனை மதிப்பீட்டு அளவுகளை கொண்டு, சரியான, தேவையான அளவு தொழு உரம் மற்றும் பிற உரங்களை இட வேண்டும்.குருத்து அழுகலை தடுக்க சரியான வடிகால் வசதி செய்ய வேண்டும். அடித்தண்டு அழுகலை கட்டுப்படுத்த, சொட்டு நீர் பாசனம் அவசியம். பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும்போது 45 நாட்கள் கழித்து காய்பறித்தல் நல்லது. நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டுக்கு இயற்கை வழி பொருள்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்த வேண்டும்.வீரிய ஒட்டு கன்றுகளை நல்ல நீர் வசதியு டன் நன்றாக பராமரித்து வளர்க்க வேண்டும். இன கவர்ச்சி பொறிகளை தோப்பின் ஓரத்திலோ அல்லது வெளியிலோ வைக்க வேண்டும்.

    விவசாயிகள் தவிர்க்க வேண்டியவை :- வீட்டுக்கு அருகில் மாட்டு தொழுவம், குப்பை மேடு பக்கத்தில் மட்டும் பிற வசதியான இடங்களில் வளரும் தென்னை மரங்களை தாய் மரமாக தேர்வு செய்யக்கூடாது. தென்னந்தோப்பை அடிக்கடி உழவு செய்தல் கூடாது.அதிகமான தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும். பரிந்துரை க்கப்படாத உரங்களை விடக்கூடாது. வேர்கள் மற்றும் தண்டுகளில் காயம் ஏற்படுத்தக் கூடாது. பச்சை இலைகளை வெட்டக்கூடாது. முதிர்ச்சி அடையாத காய்களை, விதை காய்களாக தேர்வு செய்யக்கூடாது.தாழ்வான பகுதிகளில் மழை நேரத்தில் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். பரவல் பாசன முறையை பின்பற்றக் கூடாது.இனக்கவர்ச்சி பொறிகளை நேரான சூரிய வெளிச்சத்தில் வைக்கக் கூடாது. குருத்துப் பகுதியில் பரிந்துரைக்கப்படாத பூச்சி கொல்லி மருந்துகளையே அல்லது திரவ நுண்ணுயிர் உரங்களையோ, உயிர் கொல்லியையோ தெளித்தல் கூடாது. 

    • வாய்க்காலின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் விவசாய விளை பொருட்களை சாகுபடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
    • நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு நிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் ஆக்கிரமி ப்பாளர்களிடமிருந்து மீட்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் நிரம்பி வழியும். கடந்தாண்டு வடகிழக்கு பருவ மழையின் போது வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.

    இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அந்தியூர் பகுதியில் பெய்த கனத்த மழை காரணமாக மீண்டும் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறிக் கொண்டி–ருக்கிறது.அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் சுமார் 3 ஆயிரம் மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    விவசாயிகளின் கோரி–க்கையை ஏற்று தமிழ்நாடு அரசு, அணை–யில் இருந்து ஆண்டு தோறும் புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் தண்ணீர் திறந்து விடுகிறது.

    இதில் வாய்க்கால் பாசன த்திற்காக வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 3 வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படுகின்றன. இதன்மூலம் விவசாயிகள் பயன் பெற்ற வருகின்றனர். வாய்க்கால் பாசனப் பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்கள், நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

    வாய்க்காலின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் அப்பகுதியில் உள்ளோர், விவசாய விளை பொருட்களை சாகுபடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இது சம்பந்தமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், வரட்டுப்ப–ள்ளம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் வாய்க்கால்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்து எல்லைக்கல் நட்டனர்.

    எச்சரிக்கை

    மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தவர்க–ளுக்கு, சாகுபடி செய்யக்கூ–டாது என எச்சரிக்கையும் விடப்பட்டது. ஏற்கனவே சாகுபடி செய்திருந்தவர்கள் அறுவடை செய்த பின்பு, மீண்டும் சாகுபடி செய்யக்கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டிப்புடன் எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆனால், வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் வட்டக்காடு பகுதியில் உள்ள முதல் வாய்க்கால் பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்களில் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த நபர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    பொதுப்பணித்துறை அதிகாரிகளின் எச்சரி–க்கையும் மீறி அப்பகுதியில் உள்ள நபர்கள் அப்பகுதியை ஆக்கிரமித்து சாகுபடி செய்து வருகின்றனர்.

    வட்டக்காடு பகுதியில் உள்ள வாய்க்கால்களின் இரண்டு புறங்களிலும் ஆக்கிரமிப்பாளர்கள், தொடர்ந்து பொதுப்ப ணித்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையை பொருட்ப–டுத்தாமல் வாழை, சோளம் உள்ளிட்ட விளை பொருட்கள் சாகுபடி செய்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது,

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் எல்லைக்கல் நட்டதற்குப் பிறகும் அப்பகுதியை சேர்ந்த சிலர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதிகளில் சாகுபடி செய்து வருகின்றனர்.

    நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு நிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் ஆக்கிரமி ப்பாளர்களிடமிருந்து மீட்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இல்லையேல், வாய்க்கால் புறம்போக்கு பகுதியை பயன்படுத்தி வந்த நபர்களிடமிருந்து, எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தினார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக வாடகை வசூல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×