search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி வளர்ச்சி"

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியுங்கள், தூத்துக்குடி வளர்ச்சிப்பணிகளுக்காக மேலும் ரூ. 100 கோடியை வழங்க‌ தயார் என்று வேதாந்தா குழுமம் பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்தது. #Sterlite #SterlitePlant
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வேதாந்தா குழுமம் சார்பாக வக்கீல் அரிமா சுந்தரம் வாதிடுகையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு மட்டுமே மூட அதிகாரம் உள்ளது என்றார்.

    மேலும் அவர் தனது வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதைத் தொடர்ந்து தாமிரம் இறக்குமதி 247 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த போராட்டத்தில் நக்ச‌லைட்டுகள் பங்கேற்றனர் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் கூறினார்.

    தொடர்ந்து, வக்கீல் அரிமா சுந்தரம் தனது வாதத்தில், பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (சி.எஸ்.ஆர்) கீழ் வேதாந்தா நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 10 கோடி வழங்கி வருகிறது.

    தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம், மருத்துவமனை, பள்ளி வசதிகள் உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளுக்காக மேலும் ரூ. 100 கோடியை வழங்க‌ விரும்புகிறது. எனவே ஆலையை திறக்க அனுமதியுங்கள் என்றார்.

    இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் வைத்தியநாதன் வாதிடுகையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரிக்க முடியாது.

    இந்த வழக்கு விசாரணையை வருகிற 10‍-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. #Sterlite #SterlitePlant
    ×