search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்குபோட்டு தற்கொலை"

    • பணியாளர்கள் வனப்பகுதிக்குள் வாலிபர் ஒருவர் வேப்ப மரத்தில் தூக்குபோட்டு இறந்து பிணமாக தொங்கியதை பார்த்துள்ளனர்.
    • இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு பாதையில் ஆத்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள படிக்கட்டு பகுதியில் கோவிலின் கட்டுமான பணியாளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள வனப்பகுதியில் செல்போன் மணி அடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்த பணியாளர்கள் வனப்பகுதிக்குள் சென்று பார்த்த போது அங்கு சுமார் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் வேப்ப மரத்தில் தூக்கு போட்டு இறந்து பிணமாக தொங்கியதை பார்த்துள்ளனர்.

    பின்னர் அவர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கிய வாலிபரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அந்த வாலிபர் யார்? எந்த ஊர்? எதற்காக இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் நேற்று முன்தினம் மாலையில் பக்தர் ஒருவர் படிக்கட்டு வழியாக சென்னிமலை முருகன் கோயிலுக்கு நடந்து சென்றுள்ளார்.

    அப்போது படிக்கட்டு பாதையில் உள்ள ஆத்தி விநாயகர் கோவிலின் முன்பு ஒரு பை கிடந்துள்ளது. அந்த பை யாருடையது என தெரியாததால் அந்த பையை அவர் கோவில் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.

    அந்த பை தூக்குபோட்டு இறந்த வாலிபர் கொண்டு வந்த பையாக இருக்கலாம் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×