search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்கு போட்டு"

    • இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரவு அனைவரும் தூங்க சென்று விட்டார். இந்த நிலையில் காலை யில் பார்த்த போது வீட்டில் உள்ள ஒரு அறையில் மோகன்குமார் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
    • இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள முருகன் புதூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் மோகன்குமார் (வயது 30). கூலி தொழிலாளி. இவர் கோபிசெட்டி பாளையம் அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கோமதி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இதையடுத்து மோகன்குமார், கோமதியின் வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்தார். மோகன்குமா ருக்கு மது குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரவு அனைவரும் தூங்க சென்று விட்டார்.

    இந்த நிலையில் காலை யில் பார்த்த போது வீட்டில் உள்ள ஒரு அறையில் மோகன்குமார் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×