search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துறைமுக டிரெய்லர் லாரிகள்"

    லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக துறைமுக டிரெய்லர் லாரிகள் இன்று முதல் ஓடாது என்று சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது. #LorryStrike
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்ககட்டணம் வசூலிக்க வேண்டும். 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஒரு வார காலமாக லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் டிரெய்லர் லாரிகளும் பங்கேற்க வேண்டும் என்று அந்த சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சென்னை ராயபுரத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் டிரெய்லர் லாரிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் என்.மனோகரன், செயலாளர் எஸ்.ஆர்.ராஜா உள்பட நிர்வாகிகளும், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) தலைவர் குமாரசாமி, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் உள்பட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு துறைமுக டிரெய்லர் லாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.ராஜா நிருபர்களிடம் கூறும்போது, ‘எங்கள் சங்கத்தில் 6 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும், 2 ஆயிரம் டாரஸ் லாரிகளும் உள்ளன. லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக நாளை முதல்(இன்று) டிரெய்லர் லாரிகளும், டாரஸ் லாரிகளும் ஓடாது. இதனால் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிக்கப்படும்.’ என்றார்.

    மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின்(தமிழ்நாடு) தலைவர் எஸ்.ஆர்.குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 90 சதவீதம் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் கடந்த ஒரு வாரத்தில் ரூ.10 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. மத்திய அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடியும், லாரி உரிமையாளர்களுக்கு ரூ.1,500 கோடியும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூக தீர்வு காணும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென் மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன.



    லாரிகள் வேலைநிறுத்தத்தால், தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்களை வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தீப்பெட்டி பண்டல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, தூத்துக்குடி துறைமுகத்துக்கும் லாரிகளில் கொண்டு செல்ல முடியவில்லை.

    மேலும் தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான மெழுகு, குச்சி, பொட்டாசியம் குளோரைடு, பாஸ்பரஸ், கந்தகம் போன்றவற்றையும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர முடியவில்லை.

    இதனால் சுமார் 2 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்து உள்ளன. தீப்பெட்டி தொழில் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் மூலம் ரூ.400 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் கோவில்பட்டி நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளதாலும், தீப்பெட்டி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தீப்பெட்டி தொழிற்சாலைகளை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், “தீப்பெட்டி தொழிலில் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். எனவே, லாரி உரிமையாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.  #LorryStrike
    ×