search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரை வைகோ"

    • தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டைப் பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரி இருக்கிறது.
    • ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    கடந்த 4-ந்தேதி வீசிய மிச்சாங் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழையால் மீள முடியாத துயரத்தில் தென்மாவட்ட மக்கள் சிக்கி இருக்கிறார்கள். வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கிறார்கள்.

    எனவே தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டைப் பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரி இருக்கிறது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு அதனை ஏற்காமல் போதிய நிதியும் ஒதுக்கீடு செய்யாமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. அவ்வாறு தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கண்டித்து தமிழ்நாட்டை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை எனது தலைமையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமலாக்கத்துறையின் தற்போதைய நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கிறது.
    • ரூ.400 ஆக இருந்த சிலிண்டர் விலை 10 வருடத்தில் ரூ.1100 வரை உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல்:

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

    லஞ்சம், ஊழலை ஒழிக்கவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவை உருவாக்கப்பட்டது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் அமலாக்கத்துறையை பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் தற்போது திண்டுக்கல்லில் டாக்டரை மிரட்டி பணம் பறித்த அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அமலாக்கத்துறையின் தற்போதைய நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசியல்வாதிகளுக்கு முதிர்ச்சியில்லை என கூறுகிறார். மத சாயம் பூசி தவறான தகவல்களை தெரிவிப்பதுதான் முதிர்ச்சியா என்பதை அவர் விளக்க வேண்டும்.

    மேலும் தற்போது கவர்னர்கள் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பர்ஷித் ஆகியவற்றின் கொள்கை பரப்பு செயலாளர்கள் போல் செயல்படுகின்றனர். மத்திய பிரதேச தேர்தலில் வெற்றிபெற ரூ.12 ஆயிரம் கோடி வரை பா.ஜனதாவினர் செலவழித்துள்ளனர். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதற்கு அடிப்படை காரணமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வாகும். தேர்தல் நேரங்களில் மட்டும் டீசல், பெட்ரோல், சிலிண்டர்களின் விலையை குறைக்கின்றனர். ரூ.400 ஆக இருந்த சிலிண்டர் விலை 10 வருடத்தில் ரூ.1100 வரை உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • மணிப்பூர் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு ஏற்பட்டது.
    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு சராசரி அரசியல்வாதி தான். சில சமயங்களில் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்.

    மதுரை:

    மருதுபாண்டியர்கள் 224-வது நினைவு நாளையொட்டி திருப்பத்தூர் செல்வதற்காக ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நீட் தேர்வை பா.ஜ.க.வைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்க்கிறது. அதில் ம.தி.மு.க.வும் ஒன்று என்பதில் மாற்று கருத்து இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தி.மு.க. கையெழுத்து இயக்கம் துவங்கியுள்ளது. அதற்கு ம.தி.மு.க. சார்பாக முழு ஆதரவு உண்டு.

    தொடர்ந்து தி.மு.க.வுடன் சேர்ந்து அனைவரும் குரல் கொடுத்து வருகிறோம். ஒரு வருடத்திற்கு மேலாகவே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் கையெழுத்துக்காக காத்திருந்தது. பல போராட்டத்திற்கு பிறகு ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். கவர்னரால்தான் இந்த ஒரு ஆண்டு கால தாமதம் ஏற்பட்டது. நீட் விலக்கு தமிழ்நாட்டிற்கு வரும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    மணிப்பூர் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு ஏற்பட்டது. அதுபோல நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

    நடிகர் விஜய்யும், அவருடைய தந்தையும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவரும் அரசியல் வருவதற்கு உரிமை உள்ளது. ஆனால் அதை முடிவெடுக்க வேண்டியது மக்கள்தான். அவர்கள் வரக்கூடாது என்று நினைப்பதற்கு வேறு யாருக்கும் உரிமை கிடையாது. அவர்களை எங்கு வைக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

    ஐந்து மாநில தேர்தலை ஒட்டி அந்தந்த மாநிலங்களில் வேலை நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் வேறு, பாராளுமன்ற தேர்தல் வேறு. பாராளுமன்றத் தேர்தலை பொருத்தவரை அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை தி.மு.க., ம.தி.மு.க. என அனைவரும் வலியுறுத்துகிறோம்.

    பீகாரரைப் போல மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கலாம் என்று கூறினாலும், தேசிய ஜனத்தொகையுடன் ஜாதி வாரி கணக்கெடுப்பு சேர்ந்து எடுக்கும்போது பல நன்மைகள் உள்ளது. மத்திய அரசு காலம் தாழ்த்தினால் தமிழக அரசு ஜாதி வாரி கணக்கு எடுப்பை நடத்தும்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு சராசரி அரசியல்வாதி தான். சில சமயங்களில் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார். அவருக்காக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு மாதிரி பேசுகிறார், மாற்றுக் கட்சி கைதுக்கு வேறு மாதிரி அறிக்கை கொடுக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு 2. 70 லட்சம் கோடி ரூபாயை 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும்.
    • தமிழக அரசும் தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பங்கீடு பெறுவதற்கு சட்டரீதியாகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

    திருச்சி:

    திருச்சியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வருகை தந்த துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காவரி நீர் பங்கீட்டில் கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி உள்ளது. எனவே மத்திய அரசு உரிய இழப்பீட்டை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

    அதேபோல் தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது நாளுக்கு நாள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நம்பி 16 கோடி பெண்கள் பதிவு செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு 2. 70 லட்சம் கோடி ரூபாயை இந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறது.

    கடந்த ஆண்டு 72 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு நடப்பாண்டில் 21 சதவீத விழுக்காடு குறைவாக 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசும் தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பங்கீடு பெறுவதற்கு சட்டரீதியாகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

    இருப்பினும் அவர்கள் நம்முடைய முயற்சிக்கான எந்த பலனையும் வழங்காமல் இருக்கிறார்கள். எனவே உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசு முன்வந்து கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல் பயிரிடப்பட்டுள்ள குறுவை கருகிய நிலையில் இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 13 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு அதை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி கொடுக்கும் சீட்டின் அடிப்படையில் எப்போதும் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாங்கள் ஒரே கொள்கையில் இருக்கிறோம். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கத்திற்காக கூட்டணியில் உள்ள அனைவரும் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

    கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க சிறுபான்மை மக்களுக்கு எதிராக என்னென்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது சிறுபான்மை மக்களுக்கு நன்றாக தெரியும்.

    இவ்வாறு துரை வைகோ கூறினார்.

    • தமிழ்நாட்டில் இருந்து மதவாத சக்தியான பா.ஜ.க.வை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்.
    • பா.ஜ.க.வை விட்டு விலகுவது என்ற முடிவை அ.தி.மு.க. எடுத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து திராவிட இயக்கங்களும் வரவேற்கும்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரை திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டில் இருந்து மதவாத சக்தியான பா.ஜ.க.வை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்.

    பா.ஜ.க.வை விட்டு விலகுவது என்ற முடிவை அ.தி.மு.க. எடுத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து திராவிட இயக்கங்களும் வரவேற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சனாதனம் கலாசாரம் வேறு, இந்து மதம் என்பது வேறு.
    • ராவிடர்களும், திராவிட இயக்கங்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல.

    கோவை:

    மதுரையில் வருகிற 15-ந் தேதி மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடக்கிறது. இது தொடர்பான கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சித்தாபுதூரில் உள்ள ம.தி.மு.க அலுவலகத்தில் நடந்தது. இதில் கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சனாதனம் கலாசாரம் வேறு, இந்து மதம் என்பது வேறு. திராவிடர்களும், திராவிட இயக்கங்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. வட நாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து திராவிட இயக்கங்கள் இந்துகளுக்கு எதிரி போல சித்தரித்து வருகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் வருவதால் மத்திய அரசின் குறைகளை மறைக்கவும், திசை திருப்பவும் இதை செய்கிறார்கள். எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்திருப்பதால், மத ரீதியாக காழ்ப்புணர்ச்சியை உருவாக்க பார்க்கிறார்கள்.

    அன்பே சிவம் என்பது தான் இந்து மதம். ஆனால் அயோத்தியில் உள்ள ஒரு சாமியார் உதயநிதியின் தலைக்கு விலை பேசி ஒரு தலிபான் போல செயல்பட்டு உள்ளார்.

    உதயநிதி பேச்சை திரித்து இந்து மதத்திற்கும், இந்து மதத்தை பின்பற்று பவர்களுக்கும் தி.மு.க, மற்றும் இந்தியா கூட்டணியினர் எதிரானவர்கள் என்ற கருத்தை உருவாக்க பார்க்கிறார்கள். இந்த பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பேசி உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சி குறித்து எங்களுக்கு எந்த குறைபாடும் தெரியவில்லை. எதிர்கட்சி தலைவர் என்பதால் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி மீது குறை சொல்லியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியப்படாது. இந்தியா கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க இதை கொண்டு வருகிறார்கள். மின் கட்டண உயர்விற்கு மாநில அரசுகள் காரணம் அல்ல. மத்திய அரசு தான் காரணம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடையநல்லூர் ஆலங்குளம் , கீழப்பாவூர் ஆகிய ஒன்றியப் பகுதிகளை வறட்சிப் பகுதியாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.
    • சங்கரன்கோவில் ஒன்றியப் பகுதிகளை ஒட்டியுள்ள குருவிகுளம் ஒன்றியப் பகுதி எப்போதுமே வறட்சியான பகுதிதான்.

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தின் பெரும் பகுதி வானம் பார்த்த பூமி ஆகும். இம்மாவட்டம் வறட்சி நிலவும் பகுதிகளாகத்தான் விளங்குகின்றன. அதனடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கணக்கெடுத்து சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், கடையநல்லூர் ஆலங்குளம் , கீழப்பாவூர் ஆகிய ஒன்றியப் பகுதிகளை வறட்சிப் பகுதியாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.

    அதே நேரத்தில் மேலநீலதநல்லூர் சங்கரன்கோவில் ஒன்றியப் பகுதிகளை ஒட்டியுள்ள குருவிகுளம் ஒன்றியப் பகுதி எப்போதுமே வறட்சியான பகுதிதான். நாட்டின் சராசரி நிலத்தடி நீர் மட்டத்தை விட நிலத்தடி நீர் மட்டம் ஆழமாக போய்விட்டதன் காரணமாக குருவிகுளம் ஒன்றியத்தில் ஆழ்துளை கிணறு தோண்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குருவிகுளம் ஒன்றியமும் வறட்சியான பகுதி தான் என்பதை உணரலாம். தவிர, வருவாய் நிர்வாக ஆணையரும் குருவிகுளம் ஒன்றியத்தை மிதமான வேளாண் வறட்சி மாவட்டமாக அறிவித்திட முன்மொழிவு அனுப்பி உள்ளார். அதனை ஏற்றும், உண்மை நிலையை கருத்திற் கொண்டும் குருவிகுளம் ஒன்றியத்தையும் மிதமான வேளாண் வறட்சி ஒன்றியமாக அறிவித்திட வேண்டும் என வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினேன்

    கடிதத்தில் தெரிவித்த அரசாணை நகலையும் அமைச்சரின் பார்வைக்கு இணைத்து உள்ளேன். எனது கருத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்த அமைச்சர் ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ம.தி.மு.க. கட்சியில் இருப்பவர்கள் எங்களுக்கும் காலம் வரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
    • வைகோவையும், அவரது மகன் துரை வைகோவையும் மன்னர்களாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் உலாவவிட்டு உற்சாகமடைந்து வருகிறார்கள்.

    ம.தி.மு.க. அரசியலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டாவிட்டாலும் அந்த கட்சியில் இருப்பவர்கள் எங்களுக்கும் காலம் வரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

    இப்போது வைகோவையும், அவரது மகன் துரை வைகோவையும் மன்னர்களாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் உலாவவிட்டு உற்சாகமடைந்து வருகிறார்கள். பரவாயில்லை இப்படியாவது தங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்கிறார்களே... சபாஷ்

    • ம.தி.மு.க. சார்பில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட எங்களின் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
    • எங்களுக்குள் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.

    திருச்சி:

    தமிழ்நாடு கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யுமாறு இந்திய குடியரசு தலைவரை கேட்டுக்கொள்ளும் வகையில், ம.தி.மு.க. சார்பில், திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    இதனை ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அண்ணா சிலையிலிருந்து சிங்காரத்தோப்பு, பூம்புகார் விற்பனை நிலையம் வரை அவர் நடந்து சென்று பொதுமக்களிடையே கையெழுத்து வாங்கினார். பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட எங்களின் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எங்களுக்குள் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.

    நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூர் கலவரம் இதற்கெல்லாம் பதில் கூறாமல், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பா.ஜ.க.வினர் பொது சிவில் சட்டம் குறித்து இப்போது பேசுகிறார்கள்.

    நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது குறித்தும் எங்கள் கட்சி தலைமையும், கூட்டணி கட்சி தலைமையும் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ம.தி.மு.க. செய்தி தொடர்பாளராக மின்னல் முகமது அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
    • நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி, வைகோ மற்றும் துரை வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    சென்னை:

    ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.

    இதில் கட்சியின் செய்தி தொடர்பாளராக மின்னல் முகமது அலி நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி, வைகோ மற்றும் துரை வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    • மூத்த நிர்வாகிகள் சிலரும் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஆசையை கூறி இருக்கிறார்கள்.
    • ‘ஒண்ணு உறுதியாக தருவார்கள்’ இன்னொண்ணு தருவார்களா, என்பது தெரியவில்லை.

    எந்த கட்சி எந்த பக்கம் போவது என்று ஒரு பக்கம் யோசித்து கொண்டிருந்தாலும் கூட்டணியில் மாற்றமில்லை என்பதில் உறுதியாக இருக்கும் உதிரி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் இப்போதே இடம் பிடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள்.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வில் வைகோ மகன் துரை வைகோ வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. விருதுநகர் தொகுதியை இப்போதே அவர் 'அட்வான்ஸ் புக்கிங்' செய்து வேலையையும் தொடங்கி விட்டாராம்.

    அதே நேரம் மூத்த நிர்வாகிகள் சிலரும் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஆசையை கூறி இருக்கிறார்கள். 'ஒண்ணு உறுதியாக தருவார்கள்' இன்னொண்ணு தருவார்களா, என்பது தெரியவில்லை. கிடைத்தால் பார்ப்போம் என்று அவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறார்கள்.

    • ம.தி.மு.க. தொடங்கிய 30 ஆண்டுகளில் அதன் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
    • உட்கட்சி தேர்தலிலும் துரைசாமி தனது பதவியை இழந்து வருகிறார்.

    சென்னை:

    ம.தி.மு.க.வுக்குள் நிலவி வரும் உட்கட்சி மோதலால் தொண்டர்கள் ஏமாந்தது போதும். இனி ம.தி.மு.க.வை தாய் கழகமான தி.மு.க.வுடன் இணைத்து விடுவது நல்லது என்று அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு கடிதம் எழுதினார். இதனால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பதில் அளித்தார். அதில் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

    ஆனால் துரை வைகோ சின்ன பையன் அவருக்கெல்லாம் நான் பதில் அளிக்க முடியாது. வைகோ சொல்லட்டும் நான் பதில் அளிக்கிறேன் என்றார் துரைசாமி.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக துரை வைகோ கூறியதாவது:-

    கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ம.தி.மு.க. முடிவு செய்தது. அப்போது அதை எதிர்த்தவர் திருப்பூர் துரைசாமி. இப்போது அவரே ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் சொல்கிறார். ஏதோ ஒரு உள்நோக்கத்துடன்தான் அவர் இவ்வாறு பேசுகிறார்.

    ம.தி.மு.க. தொடங்கிய 30 ஆண்டுகளில் அதன் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் அப்படியே செயல்படும்.

    துரைசாமி தொழிற்சங்க நிர்வாகி. மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி அமைப்பை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்துகிறார். கட்சியை தனது பாதுகாப்பு கேடயமாக வைத்துக்கொண்டார்.

    கட்சியை தி.மு.க.வுடன் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

    2021 சட்டமன்ற தேர்தலில் கட்சி நலன்களுக்கு எதிராக செயல்பட்டதாக கட்சி தொண்டர்கள் புகார் கூறினார்கள். ஆனால் வைகோ தான் துரைசாமியின் அனுபவம், வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு எதுவும் செய்யவில்லை.

    இப்போது உட்கட்சி தேர்தலிலும் துரைசாமி தனது பதவியை இழந்து வருகிறார்.

    இதற்கிடையே அவரது சொந்த ஊரான திருப்பூரிலேயே அவரது கட்சி விரோத செயல்களை கட்சி தொண்டர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் என்றார்.

    ×