search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீக்குளிக்க முயற்சி"

    • மண்எண்ணையை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
    • சமாதானம் பேசி மீண்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண் மண்எண்ணை கேன் எடுத்து வந்து திடீரென்று தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    இதில், அந்த பெண் தருமபுரி மாவட்டம், முத்தம் பட்டியை அடுத்த வே.மங்கள கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி பழனியம்மாள் என்பது தெரியவந்தது. இவர் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரிடம் நிலம் வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் வீட்டை அபகரிக்கும் எண்ணத்தில் தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்து வருவதா கவும், இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் எனக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சி செய்ப வர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    அங்கிருந்த போலீசார் அவரிடம் சமாதானம் பேசி மீண்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் கோணங்கி நாயக்கன அள்ளியை சேர்ந்த சிவனேசன் என்பவர் மனு கொடுக்க இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைக்க முயன்றார். அவரையும் போலீசார் மீட்டு விசாரித்தனர்.

    இதில், சிவனேசனின் பக்கத்து நிலத்ைதச் சேர்ந்த வரான ஆறுமுகம் என்பவரின் மகன்கள் சிவசங்கர், சரவணன், ராஜ சேகர் ஆகிய 3 பேரும் அவருக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் செல்லும் பொது வழிப்பாதையை நீக்கி விட்டு விவசாய நிலமாக மாற்றி அபகரிக்க முயற்சி செய்தனர். இதுகுறித்து அவர் தட்டிகேட்டதற்கு 3 பேரும் தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரியவந்தது.

    இது தொடர்பாக கடந்த மாதம் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தும் இது வரை எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. உடனே அங்கிருந்த போலீசார் சிவனேசனை சமாதானம் பேசி கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதித்தனர்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத் தீர்க்கும் முகாமில் மனு கொடுக்க வந்த பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சடையப்பன் குடும்பத்தினர் உள்பட 10 பேர் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தனர்.
    • சடையப்பன் தான் மறைத்து வைத்து எடுத்து வந்த 3 லிட்டர் மண்எண்ணையை தலையில் ஊற்ற முயன்றார். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சடையப்பன் (வயது 38). இவரது மனைவி தெய்வானை (35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    தீக்குளிக்க முயற்சி

    இந்த நிலையில் சடையப்பன் குடும்பத்தினர் உள்பட 10 பேர் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தனர். அப்போது சடையப்பன் தான் மறைத்து வைத்து எடுத்து வந்த 3 லிட்டர் மண்எண்ணையை தலையில் ஊற்ற முயன்றார். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர் .

    அப்போது சடையப்ப னின் தங்கை சடையம்மாள் (32) திடீரென பிளேடால் கையை அறுத்தார். இத

    னால் பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்தி ரிக்கு அழைத்து செல்ல முயன்றனர் . ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்தார். இைதயடுத்து போலீசார் அவரை சென்று வாகனத்தில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர் . தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சடையப்பன் கூறுகையில், தங்களது வீட்டின் அருகில் அரசு சார்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது . இது தங்களுக்கு பெரும் இடைஞ்சலாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கா ததால் மன வேதனையில் உள்ளோம். எனவே கலெக்டர் தலையிட்டு இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், என்றார்.

    • கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்றார்.
    • போலீசார் மாற்றுத்திறனாளி பெண்ணை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவ லகத்தில் வாரந் தோறும் திங்கட்கிழமை களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகி றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் நேரடியா கவோ, மனுக்கள் மூலமா கவோ தெரிவிப்பார்கள்.

    அதன்படி இன்று கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் ஏராள மானோர் மனு கொடுக்க நீண்ட வரிசையில் காத்தி ருந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதை பார்த்த பொது மக்கள் மற்றும் போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இது தொடர்பாக போலீசார் மாற்றுத்திறனாளி பெண்ணை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி னர்.

    அப்போது அவர் பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த சிறுமணி மகள் கவிதா, மாற்றுத்திறனாளி என தெரியவந்தது. இவரது குடும்பத்தினர், அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் நடத்தி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக ரூ.4 லட்சம் அபராதம் கட்டவில்லையென்றால் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக மிரட்டுகின்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

    கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மகாலட்சுமி (வயது 46). இவர் நேற்று பகல் 1 மணியளவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
    • அங்கு அலுவலகத்தின் முன்பு நின்ற அவர் திடீரென தனது கட்டைப்பையில் வைத்திருந்த கேனில் உள்ள பெட்ரோலை எடுத்து தலை மற்றும் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் கடந்த 17 ஆண்டுகளாக துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வருபவர் மகாலட்சுமி (வயது 46). இவர் நேற்று பகல் 1 மணியளவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அலுவலகத்தின் முன்பு நின்ற அவர் திடீரென தனது கட்டைப்பையில் வைத்திருந்த கேனில் உள்ள பெட்ரோலை எடுத்து தலை மற்றும் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஓடி வந்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி நனைத்தபடியால் உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டு நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள தாரமங்கலம் நங்கவள்ளி மெயின் ரோட்டில் உருண்டு விழுந்து கதறி துடித்துள்ளார்.

    இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கவுன்சிலர் சின்னுசாமி. செல்வமணி ஆகியோர் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, துப்புரவு ஆய்வாளர் கோபிநாத் ஆகியோரிடம் மகாலட்சுமிக்கு ஆதரவாக விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

    அப்போது அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுத பெண் ஊழியர் மகாலட்சுமி கூறியதாவது:- நகராட்சியில் பணிபுரியும் சக துப்புரவு ஊழியர் ஒருவர் தான் அதிகாரி போல் நடந்து கொண்டு என்னை ஒருமையில் திட்டி வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடுவதும்,என்னை அலுவலகத்திற்கு வெளியில் நிறுத்தியும் கொடுமை படுத்துகிறார். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் கூறியும் எனக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

    இதையடுத்து பெண் ஊழியரை மீட்டு தாரமங்கலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தரமாங்கலம் நகராட்சியில் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மகாலட்சுமி புகார் கூறிய சக துப்புரவு ஊழியரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பத்மாவதி மற்றும் அவரது கணவர், குழந்தைகள், உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
    • குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக கையில் பெட்ரோல் கேனை கொண்டு வந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. கர்ப்பிணியான பத்மாவதிக்கு, கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 19.9.2022 அன்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிகிச்சை முடிந்ததும் பத்மாவதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அதன் பிறகு பத்மாவதிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 நாட்களாக எவ்வித சிகிச்சையும் அளிக்காததால், உறவினர்கள் அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பத்மாவதியை பரிசோதனை செய்ததில் பிரசவத்தின் போது குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளதும், அதனால் தான் வயிறு வலி ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பத்மாவதி, சிகிச்சை முடிந்ததும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு, எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என தெரிகிறது. இதனால் பத்மாவதி மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டரிடம் தொடர்ந்து புகார் அளித்தும் பதில் ஏதும் இல்லை. இது தொடர்பாக பத்மாவதியின் உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியின் முன்பாக ஏற்கனவே போராட்டம் நடத்தியுள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை பத்மாவதி மற்றும் அவரது கணவர், குழந்தைகள், உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக கையில் பெட்ரோல் கேனை கொண்டு வந்தனர். இதனை பார்த்த போலீசார் அவர்களிடமிருந்து பெட்ரோல் கேனை வலுக்கட்டாயமாக பிடுங்கினர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதுவரையில் மூன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேல் எங்களால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது. எனவே, நாங்கள் அனைவரும் உயிரை மாய்த்துக்கொண்டு எங்களுடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்குகின்றோம் என்று கூறி ஆஸ்பத்திரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பத்மாவதி உறவினர்கள் சமாதானப்படுத்தி வருகின்றனர். தவறான சிகிச்சை செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

    • தீக்குளிக்க முயன்ற தந்தை-மகன் மீது வழக்குப்பதியப்பட்டது.
    • புதுக்குளம் கிராம நிர்வாக அதிகாரி சரவணகுமார் புகார் செய்தார்.

    விருதுநகர்

    திருச்சுழி தாலுகா பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தெய்வசிகாமணி. நரிக்குடி-திருப்புவனம் மாநில ெநடுஞ்சாலையை ஆக்கிரமித்து இவர்கள் வீடு, கடை கட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் வீடு, கடையை அகற்ற உத்தரவிடப்பட்டது. அதன்படி மதுரை ெநடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் சங்கர் தலைமையில் ஊழியர்கள் கட்டிடத்தை இடிக்க வந்தனர். அப்போது தந்தையும்-மகனும் பெட்ரோலை தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    அங்கிருந்த ேபாலீசார் உடனடியாக தடுத்து அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் ஊழியர்கள் வீடு, கடையை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த நிலையில் அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து மாரியப்பன், தெய்வசிகாமணி தீக்குளிக்க முயன்றது தொடர்பாக ஏ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புதுக்குளம் கிராம நிர்வாக அதிகாரி சரவணகுமார் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தங்கள் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
    • சரவணனின் மனைவி சென்றபோது, அங்குள்ள ஒரு சிலர் நீயும் உனது கணவரும் ஊருக்குள் வரக்கூடாது. இதனை மீறி வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். இன்று காலை மாற்றுத்திறனாளி இளைஞருடன் அவரது குடும்பத்தினர் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தங்கள் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

    அங்கு இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவர்களிடம் இருந்த கேனை பிடுங்கினர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பண்ருட்டி அடுத்த வீரசிங்கன்குப்பத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது தாய், மனைவி, மாற்றுத்திறனாளி மகன், சிறுவன் உள்பட 5 பேர் வந்திருந்தது தெரிய வந்தது.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக சரவணன் வீட்டையும், காரையும் அடித்து உடைத்து தீ வைத்து கொளுத்தி விட்டனர். மேலும் இந்த ஊருக்குள் வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தும், பல்வேறு கட்ட போராட்டம் நடத்திய பிறகு, சம்பந்தப்பட்ட ராஜ்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் வீரசிங்ககுப்பத்திற்கு சரவணனின் மனைவி சென்றபோது, அங்குள்ள ஒரு சிலர் நீயும் உனது கணவரும் ஊருக்குள் வரக்கூடாது. இதனை மீறி வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுக்க போலீசார் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி சரவணன், நாங்கள் ஊருக்கு செல்லும் போது மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி மனு கொடுத்தார். கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மகனுடன் குடும்பத்தினர் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அசல் ஆவணங்களை பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாக கூறியதின் பேரில் அருள் மற்றும் கீர்த்தனா ஆகியோர் அங்கிருந்து சென்றனர்

    பெரம்பலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கல்லூரை சேர்ந்தவர் அருள் (வயது 36). இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெரம்பலூர் நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள தனியார் நிதி நிறுவன வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூ.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், அருள் தனது வீட்டு கடனை அசல் மற்றும் வட்டியுடன் முழுவதுமாக கடந்த மாதம் செலுத்திவிட்டு தனது அசல் ஆவணங்களை கேட்டுள்ளார். ஆனால், நிதி நிறுவன வங்கி மேலாளர் உள்ளிட்டோர் அசல் ஆவணங்களை வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.

    இதனால் மன உளைச்சல் அடைந்த அருள், தனது மனைவி கீர்த்தனாவுடன் (30) சம்பந்தப்பட்ட நிதி நிறுவன வங்கி முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்கு பெட்ரோலுடன் வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அசல் ஆவணங்களை பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாக கூறியதின் பேரில் அருள் மற்றும் கீர்த்தனா ஆகியோர் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மனைவி, மகனை கண்டுபிடித்து தரக்கோரிக்கை
    • நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

    பேரணாம்பட்டு அடுத்த கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி என்பவர் மனு அளிக்க வந்திருந்தார். அவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி அளித்தனர். வாலிபர் தீ குளிக்க முயன்ற சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து ராஜீவ் காந்தி கூறுகையில்:-

    எனது மனைவி சகுந்தலா (வயது 32 ), மகன் புகழ் ஆகியோர் கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டனர். அவர்களை மீட்டு தரக்கோரி பேரணாம்பட்டு போலீசில் புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன் என கூறினார். இதனையடுத்து அவரை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அழைத்து சென்றனர். அவர் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டை இடிக்க முயன்றதால் விபரீதம்
    • போலீசார் தடுத்து தண்ணீரை ஊற்றினர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட் டம், நெமிலி அருகே உள்ள பெரப்பேரி கிராமத்தில் அர சுக்கு சொந்தமான பாதை புறம்போக்கு இடத்தை ஆக்கிர மிப்பு செய்து கடந்த 5 ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்தனர்.

    இந்தநிலை யில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெரப்பேரி கிராமத் தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் ஆக்கிர மிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசா ரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு களை அகற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரு வாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டில் கோர்ட்டு உத்தரவை ஒட்டினர். இந்த நிலையில் நேற்று நெமிலி தாசில் தார் சுமதி தலைமையில், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், வரு வாய் ஆய்வாளர் கனிமொழி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சாலமன் ராஜா, பாரதி ஆகி யோர் சென்று ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் மாட்டுக்கொட்ட கையை அப்புறப்படுத்த முயன்றனர்.

    இதற்கு வீட்டின் உரிமையாளர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்கு ளிக்க முயற்சி செய்தார்.

    அவரை போலீசார் தடுத்து தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் வீடு இடித்து அப் புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
    • போலீசார் விசாரணை

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    இந்த நிலையில் மனு கொடுக்க வந்த ஒரு பெண் கலெக்டர் அலுவலகம் முன்தனது உடலில் திடீரென மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் அவரை தனியாக அழைத்துச்சென்று விசா ரணை நடத்தினர்.

    இதில் அந்த பெண் சோழவந்தானை அடுத்த பொம்பன்பட்டியைச் சேர்ந்த மரியா என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் கூறியதா வது:-

    நான் எனது கணவர் ஜான் வெஸ்லி, நாத்தனார் கலா ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தேன்.எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து என்னை வீட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத் தினர். அப்போது நான், எனக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று தெரிவித்தேன். இதனால் ஆத்திரமடைந்த கலா உள்ளிட்ட 6 பேர் என்னை தாக்கினர். இது பற்றி சோழவந்தான் போலீஸ் நிலையத்திலும், எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் செய்தேன். இருந்த போதிலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வாழ்க்கையில் வெறுப்ப டைந்து கலெக்டர் அலுவ லகம் முன்பு தீக்குளிக்க முடிவு செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆவேசமடைந்த மேலபட்டினச்சேரி மீனவர்கள் இன்று திடீரென நாகூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வாக்குவாதத்தில் மீனவர் ஒருவர் திடீரென டீசலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூரில் மேலபட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வது தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. இந்நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய மேலபட்டினச்சேரி மீனவர்கள் பிடித்து வந்த மத்தி மீன்களை நாகூர் துறைமுகத்தில் விற்பனை செய்யக்கூடாது என மற்றொரு தரப்பு மீனவர்கள் தடுத்துள்ளனர்

    மேலும் அந்த மீன்களை வியாபாரிகள் ஏலம் எடுக்க கூடாது எனவும் கூறியுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த மேலபட்டினச்சேரி மீனவர்கள் இன்று திடீரென நாகூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள் விற்பனை செய்ய முடியாததால் ஆத்திரமடைந்து அவர்கள் பிடித்து வந்த அந்த மீன்களை சாலையில் கொட்டி துறைமுகத்தில் மீன் விற்க தங்களுக்கு உரிமை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

    மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் நாகூர் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது இதையடுத்து அங்கு வந்த டிஎஸ்பி சரவணன் நாகூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம்ஆகியோர் சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவா ர்த்தையில் ஈடுபட்டனர்அப்போது போலீசா ருக்கும் மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் திடீரென டீசலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார் இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.அதனைத் தொடர்ந்து நாகூர் மீன்பிடி துறைமுக த்தில் மீன்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை இணை இயக்குனர் ஜெயராஜ் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததை தொடர்ந்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

    அரசால் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தில் தங்களுக்கு சம உரிமை வழங்கி மீன்களை எந்த ஒரு பிரச்சனையுமின்றி விற்பனை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகூர் மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் வலியுறு த்தியுள்ளனர்.அதனை தொடர்ந்து மேல பட்டினச்சேரி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலை யில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனை மற்றும் ஏலத்தை தொடங்கினார்கள். தொடர்ந்து நாகூர் துறைமு கத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×