search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ பிடித்தது"

    • வீட்டில் மேல் புறம் உள்ள அறையில் புகை வந்தது.
    • வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஏசி கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்து.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே வீட்டில் பொருத்தப்பட்ட ஏசி கேஸ் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் எரிந்து நாசமானது.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியை சேர்ந்தவர் மாதையன். இவர் காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் மாட்லாம்பட்டியில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மாதையன் மற்றும் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று விட்டு கீழ் வீட்டில் இருந்தனர்.

    அப்போது வீட்டில் மேல் புறம் உள்ள அறையில் புகை வந்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் மேலே சென்று பார்த்தபோது மாடி வீட்டில் உள்ள அறையில் தீ பற்றியது தெரிய வந்தது.

    உடனே அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முற்பட்ட நிலையில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தருமபுரி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அனைத்தனர்.

    தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லாத நிலையில் அறையில் இருந்த பீரோ, கட்டில் உட்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஏசி கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    ×