என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திறக்க உத்தரவு"
- கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
- மலைப்பகுதியில் 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைத்து கொள்ள வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தல் சந்தோஷினி சந்திரா பேசியதாவது:
வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இயற்கை இன்னல்களை எதிர் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நட வடிக்கை மேற்கொள்ளும் வகையில் வட்டார அளவில் முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மீட்பு குழு, நிவாரண முகாம் மேலாண்மைக் குழு, சிறப்பு குழு அமைத்து பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து உத்தரவிட ப்பட்டுள்ளது.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இயற்கை பேரிடர் கால ங்களில் செயல்படுவதற்காக மருத்துவமனை பாதுகாப்பு செயல்திட்டம் அமைக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை யினர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்குதல் மற்றும் மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்துதல் வேண்டும்.
வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பாக உடனுக்குடன் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மலைப்பகுதியில் 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைத்து கொள்ள வேண்டும்.
கோட்ட அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறையும், அந்தந்த வட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு அதற்கான அலுவலர்களை சுழற்சி முறையில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்