search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாரூர் தற்கொலை"

    திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே கள்ளிக்குடி பகுதியை சேர்ந்தவர் வின்சிகா (வயது 28). திருநங்கை. இவர் தனது சக திருநங்கைகளுடன் திருவாரூர் அருகே மாங்குடியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    காலை வின்சிகா, ஆண்டிரியா என்பவரும் சேர்ந்து திருவாரூர் வந்துள்ளனர். புதிய பஸ் நிலையத்தில் இருவருக்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதியிலே வின்சிகா வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் மாலை ஆண்டிரியா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வின்சிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வின்சிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே வயிற்று வலி காரணமாக மனவேதனை அடைந்த அரசு பஸ் நடத்துனர் தற்கொலை செய்து கொண்டார்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள கீழகரம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் (வயது 46). இவர் நன்னிலம் கிளை தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது.

    இதனால் மனவேதனை அடைந்த மனோகரன் எலி பேஸ்ட் தின்று மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் இறந்தார்.

    இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    குடவாசல் அருகே செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர்:

    குடவாசலை அடுத்த புளிச்சகாடியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் கங்கா (வயது 24). இவர் அடிக்கடி செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். இதனை பாஸ்கரன் கண்டித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த கங்கா வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவாரூர் அருகே வயிற்று வலி காரணமாக பூச்சி மருந்தை குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர்:

    கொரடாச்சேரி காவல் சரகம் அம்மையப்பனை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 62). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி கடந்த 5 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மகாலிங்கம் சரிவர சாப்பிடாமல் இருந்துள்ளார். அதனால் அவரது வயிற்றில் புண் ஏற்பட்டு வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக மகாலிங்கம் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவநாளன்று வயிற்றுவலி அதிகமாகவே வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.

    இதில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கிய அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார்.

    இதுகுறித்து மகாலிங்கத்தின் மகன் செந்தில்குமார் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
    ×