என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு
நீங்கள் தேடியது "திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு"
திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்காததால் இளம்பெண்ணை வாலிபர் கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்:
பேரளம் அருகே உள்ள மதுரவாஞ்சேரியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் காயத்ரி (வயது 16). இவரை திருமணம் செய்ய அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவர் மகன் விக்னேஷ் விரும்பி உள்ளார். அவர் நேற்று மாலை தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று பெண் கேட்டு உள்ளார். இந்த திருமணத்துக்கு காயத்ரி வீட்டினர் சம்மதிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு காயத்ரி திடீரென மாயமாகி விட்டார். அவரை விக்னேஷ் கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி ராமச்சந்திரன் பேரளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காயத்ரியை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X