search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு"

    திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்காததால் இளம்பெண்ணை வாலிபர் கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    பேரளம் அருகே உள்ள மதுரவாஞ்சேரியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் காயத்ரி (வயது 16). இவரை திருமணம் செய்ய அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவர் மகன் விக்னேஷ் விரும்பி உள்ளார். அவர் நேற்று மாலை தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று பெண் கேட்டு உள்ளார். இந்த திருமணத்துக்கு காயத்ரி வீட்டினர் சம்மதிக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து நேற்று இரவு காயத்ரி திடீரென மாயமாகி விட்டார். அவரை விக்னேஷ் கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி ராமச்சந்திரன் பேரளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காயத்ரியை தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×