search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமங்கலத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை"

    திருமங்கலத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் ரோஜா தோட்டத்தைச் சேர்ந்தவர் ரெஜினா. திருமங்கலம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    பிரபாகரன் (20) மதுரை அண்ணாநகர் தனியார் பார்மசி கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலையில் பிரபாகரன் கல்லூரிக்கு சென்று விட்டார்.

    தாயார் ரெஜினாவும் பள்ளிக்கு சென்று விட்டார். ரெஜினா மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் அறையில் பிரபாகரன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிரபாகரன் தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×