என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » திருப்பூர் மாணவி தற்கொலை
நீங்கள் தேடியது "திருப்பூர் மாணவி தற்கொலை"
திருப்பூரில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த மைக்கேல்பாளையம் வடக்கு வீதியை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது மனைவி பாத்திமா (வயது 37). இவர்களது மகள் ஞானதர்ஷினி (16). அருளானந்தம் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சாமந்தாங்கோட்டை பகுதியில் குடும்பத்துடன் தங்கி, அங்குள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து தோட்ட வேலை செய்து வந்தார்.
அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஞானதர்ஷினி 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். கடந்த 29-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து ஞானதர்ஷினியும் தோழிகளுடன் சென்று தனது மதிப்பெண்ணை பார்த்தார். அப்போது அவர் தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். 288 மதிப்பெண்கள் வாங்கியிருந்தார்.
அவருடன் படித்த தோழிகள் அதிக மதிப்பெண்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஞானதர்ஷினி மனம் உடைந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டிற்கு சென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நிலை தேறியதையடுத்து கடந்த 5-ந்தேதி ஞானதர்ஷினியை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் 8-ந்தேதி மீண்டும் உடல்நிலை மோசமானதால் அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஞானதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த மைக்கேல்பாளையம் வடக்கு வீதியை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது மனைவி பாத்திமா (வயது 37). இவர்களது மகள் ஞானதர்ஷினி (16). அருளானந்தம் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சாமந்தாங்கோட்டை பகுதியில் குடும்பத்துடன் தங்கி, அங்குள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து தோட்ட வேலை செய்து வந்தார்.
அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஞானதர்ஷினி 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். கடந்த 29-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து ஞானதர்ஷினியும் தோழிகளுடன் சென்று தனது மதிப்பெண்ணை பார்த்தார். அப்போது அவர் தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். 288 மதிப்பெண்கள் வாங்கியிருந்தார்.
அவருடன் படித்த தோழிகள் அதிக மதிப்பெண்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஞானதர்ஷினி மனம் உடைந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டிற்கு சென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நிலை தேறியதையடுத்து கடந்த 5-ந்தேதி ஞானதர்ஷினியை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் 8-ந்தேதி மீண்டும் உடல்நிலை மோசமானதால் அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஞானதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் மதிப்பெண் குறைந்த வருத்தத்தில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னக்கா பாளையம் புது அரி ஜன காலனியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் காயத்ரி (16). இவர் தாராபுரம் சர்ச் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவருக்கு கண்ணில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் பிளஸ்-1 தேர்வில் 450 மதிப்பெண்களே பெற முடிந்தது.
இதனை தொடர்நது மாணவி காயத்ரி வேதனையில் இருந்து வந்தார் நேற்று வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாலை வீடு திரும்பிய காயத்ரியின் தாய்-தந்தை ஆகியோர் மகள் தூக்கில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அலங்கியம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னக்கா பாளையம் புது அரி ஜன காலனியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் காயத்ரி (16). இவர் தாராபுரம் சர்ச் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவருக்கு கண்ணில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் பிளஸ்-1 தேர்வில் 450 மதிப்பெண்களே பெற முடிந்தது.
இதனை தொடர்நது மாணவி காயத்ரி வேதனையில் இருந்து வந்தார் நேற்று வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாலை வீடு திரும்பிய காயத்ரியின் தாய்-தந்தை ஆகியோர் மகள் தூக்கில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அலங்கியம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X