search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் அம்மன் கோவில்"

    • சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாகாளியம்மனை சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
    • மாகாளியம்மன் கோவிலில் தக்காளி சாதம் வழங்கும் தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பூர்:

    திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த அவினாசிக்கவுண்டம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் உள்ளது. ஆடி வெள்ளியையொட்டி கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.

    இதில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாகாளியம்மனை சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் தரிசித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு பக்தர்களுக்கு அன்னதானமாக தக்காளி சாதம் வழங்கப்பட்டது. தக்காளி விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் வீடுகளில் முடிந்த வரை தக்காளி பயன்பாட்டை இல்லத்தரசிகள் குறைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மாகாளியம்மன் கோவிலில் தக்காளி சாதம் வழங்கும் தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலில் குவிந்தனர். ஆனாலும் அனைவருக்கும் தக்காளி சாதம் நிறைவாக வழங்கப்பட்டது.

    • கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
    • ஓம் சக்தி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.பெண்கள், மஞ்சள் கயிறு, குங்குமம், பூ ஆகியவற்றை, பக்தர்களுக்கு வழங்கினர். கோவில் வளாகத்தில் அன்னதானமும், கேழ்வரகு கூழ் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

    கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில்களில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், சிறப்பு வழிபாடு நடத்தி கேழ்வரகு கூழ் வழங்கினர்.பூம்புகார்நகர் முத்துமாரியம்மன் கோவில், கரட்டாங்காடு மாகாளியம்மன் கோவில் உட்பட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

    அனைத்து அம்மன் கோவில்களும் வேப்பிலை தோரணம், வாழை கம்பங்கள், பூமாலை அலங்காரத்துடன், விழாக்கோலம் பூண்டிருந்தன. திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள முனீஸ்வரன் மற்றும் அண்ணமார் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அபிேஷகம் மற்றும் அபிேஷக பூஜையும் நடந்தது. பல்லடம், ஸ்ரீ பொங்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பொங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இது போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், ஆடி 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், வழிபாடுகள் நடந்தன.

    திருப்பூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் குழந்தை வேடத்தில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ஓம் சக்தி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன் கோவிலில் புற்றுக்கண் நாகம்மாள் வேடத்தில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    ×