search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி மாவட்டம்"

    திருச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது என்று கலெக்டர் ராஜாமணி கூறினார்.
    திருச்சி:

    திருச்சி கலையரங்கம் புதிய திருமண மண்டபத்தில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சமூகநலத்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினவிழா நடந்தது. விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெண் கல்விக்கும் அவர்களுடைய வாழ்க்கை தரத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. தேசிய அளவில் கேரளாவிற்கு அடுத்து தமிழகம் கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் தான் அரசுப்பணி மற்றும் தனியார் துறைக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் சுதந்திரமாக சென்று வருகின்றனர்.

    திருச்சி மாவட்டத்தில் 10 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் அரசின் நிதி உதவியுடன் வங்கி கடன் பெற்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் வங்கிகள் மூலம் ரூ.250 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரு சதவீதம் கூட கொடுத்த கடனை வசூலிப் பதில் சிரமமில்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் இன்னும் கடனுதவி கொடுப்பதற்கு தயாராக உள்ளனர். ஒரு சில மகளிர் சுய உதவிக்குழுவினர் 3 முறை கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தி தற்போது 4-வது முறையாக கடன் பெற்றுள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தில் ஆண், பெண் விகிதாச்சாரம் 2001-ம் ஆண்டு 1000 ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் குழந்தைகளும், 2016-ம் ஆண்டு 1000 ஆண்களுக்கு 889 பெண் குழந்தைகளும், 2017-ம் ஆண்டு 1000 ஆண் குழந்தைகளுக்கு 947 பெண் குழந்தைகளும் பிறந்து உள்ளனர். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. ஆண்களும், பெண்களும் சரிநிகராக இருந்தால் தான் சமூகத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சாதிக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து பெண் குழந்தைகள் தின விழாவையொட்டி நடைபெற்ற கபடி, தொடர் ஓட்டம், கோ-கோ, டென்னிஸ் ஆகிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.
    திருச்சி மாவட்டத்தில் 16 இடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    திருச்சி:

    மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வை மாணவ-மாணவிகள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் கடந்த வருடம் தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. இதேபோல இந்த ஆண்டும் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் 16 இடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஜோசப் மேல்நிலைப்பள்ளி, தெப்பகுளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, முசிறி ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, எட்டரை, அயிலாபேட்டை, சோமரசம்பேட்டை ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள், இனாம்குளத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல வையம்பட்டி, மணப்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, துவரங்குறிச்சி, மண்ணச்சநல்லூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புள்ளம்பாடி, பெருவளப்பூர், தொட்டியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். பிளஸ்-1 மாணவர்களும் இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி காணொலி மற்றும் ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட உள்ளது. விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் தங்களது பெயரை பதிவு செய்து பயிற்சியில் சேரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    3 ஆண்டுகளாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 150 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, லால்குடி, தொட்டியம், திருவெறும்பூர், பாய்லர்ஆலை, துவாக்குடி, முசிறி உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஏராளமான போலீசார் பணியாற்றி வருகிறார்கள். 3 ஆண்டுகளாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். 

    அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வந்த போலீசார் 80 பேரும், விருப்பத்தின்பேரில் இடமாற்றம் கேட்ட 12 பேரும், சிறு, சிறு தவறுகளுக்காக தண்டனை அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் என மொத்தம் 150 போலீசார் மாவட்டத்துக்குள்ளேயே வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

    இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் பிறப்பித்துள்ளார்.
    திருச்சி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
    திருச்சி:

    இந்திய அளவில் இன்று முதல் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில்  ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள 9 வங்கி ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 10 லட்சம் பேர் வேலை நிறுத்த போராட்டத் தில் கலந்து கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 300-வங்கி கிளைகள் உள்ளன. இவற்றி 1500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், ஊதிய உயர்வு குறித்து அலட்சியப்படுத்தி வரும் மத்திய அரசின்  அலட்சிய போக்கை கண்டித்தும், 2 சதவீத  ஊதியம்  மட்டும் அளித்துள்ள இந்திய வங்கிகள் சங்கத்தின் அறிவிப்பு மற்றும் ஊழியர்களின் ஊதிய உயர்வை விரைவில் நிறைவேற்றக் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து திருச்சி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராமராஜ் கூறியதாவது:-

    நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி ஊழியர் சங்கங்கள் பங்கேற்றுள்ளன. வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 31.10.17-ல் 5 வருடம் நிறை வுற்றும் இதுவரை ஊதியம் நிறைவேற்றப்படவில்லை. இதற்காக நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. கடந்த 5-ந் தேதி நடைபெற்ற  பேச்சு வார்த்தையில் 2 சதவீதம் மட்டும் ஊதியம் உயர்த்தப்படுவதாக இந்திய வங்கி சங்கம், இந்திய அரசும் அறிவித்தது. வேலைப்பழு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 

    திருச்சி மாவட்டத்தில் மொத்தம்  300  வங்கிகள் உள்ளன. அவற்றில் 1,500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் திருச்சியில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என கூறினார். இந்த  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தலைவர் ராமமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ×