search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவறி விழுந்து தொழிலாளி பலி"

    கடலூர் தனியார் ஐஸ் தொழிற்சாலையில் ஐஸ் கட்டிகளை இறக்கி கொண்டிருந்த போது தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் காரைக்காடு அங்காளம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 45). தொழிலாளியான இவர், சிப்காட்டில் உள்ள தனியார் ஐஸ் தொழிற்சாலையில் ஐஸ் கட்டிகளை இறக்கி கொண்டிருந்தார். 

    அப்போது அவர், திடீரென நிலைதடுமாறி தவறி கீழே விழுந்து இறந்தார். இது குறித்து அவரது மகன் சீத்தாராமன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காங்கயத்தில் வீட்டின் மேற்கூரையில் ஏறி வேலை பார்த்த தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொரு தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் சேசுமாணிக்கம் (வயது 40). இவரது நண்பர் ஜெயசீலன் (46). இருவரும் தொழிலாளர்கள். இவர்கள் காங்கயத்தில் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். வீட்டின் மேற்கூரையில் ஏறி பிரித்து கொண்டிருந்தனர். அப்போது மேற்கூரை சிமெண்டு கூரை திடீரென சரிந்தது. இதில் தொழிலாளர்கள் இருவரும் மேலே இருந்து தவறி கீழே விழுந்தனர். படுகாயத்துடன் துடித்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயசீலன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் படுகாயத்துடன் சேர்க்கப்பட்ட அவரது நண்பர் சேசு மாணிக்கத்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிதாப சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் காங்கயம் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ×