search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவறாக நடக்க முயற்சி"

    ஒரத்தநாடு அருகே வீட்டில் படுத்து தூங்கிய பெண்ணை தவறாக நடக்க முயற்சி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஒரத்தநாடு:

    தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு குழமங்கலம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55) விவசாயி. இவரது மனைவி நாகம்மாள் (40), இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    நேற்று இரவு நாகம்மாள் வீட்டில் படுத்து தூங்கினார். இன்று காலை 4 மணியளவில் அதேபகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் மாரிமுத்து என்பவர் அத்துமீறி வீட்டுக்குள் சென்று நாகம்மாளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து விழித்து எழுந்த நாகம்மாள் சத்தம்போட்டார். இதைதொடர்ந்து அவரது கணவர் ஆறுமுகம் மாரிமுத்துவை பிடிக்க முயன்றார். உடனே மாரிமுத்து கட்டையால் ஆறுமுகத்தை தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டார்.

    இதுபற்றி நாகம்மாள் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்தை தேடி வருகிறார்.

    ×