search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலிபான்கள் பயங்கரவாதிகள்"

    ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் 10 பேரை பாதுகாப்பு படையினர் விடுவித்தனர்.
    குந்தூஸ்:

    ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், அரசுப் படைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படைகளுக்கு உளவு பார்ப்பதாக கூறி பொதுமக்களையும் சிறைப்பிடித்து துன்புறுத்துகின்றனர்.  தலிபான்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்க ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், குந்தூஸ் மாகாணம், சகர் தாரா மாவட்டத்தில் தலிபான்கள் வசம் உள்ள பகுதிகளை ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் தலிபான்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தங்கள் இடங்களை காலி செய்துவிட்டு தலிபான்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து மேலும் முன்னேறிய ராணுவம் அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

    அவ்வகையில், அக் சரே கிராமத்தில் உள்ள தலிபான்கள் பாதுகாப்பு அரண்களை பாதுகாப்பு படையினர் தகர்த்தனர். தலிபான்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் அங்கு நேற்று தேடுதல் வேட்டை நடத்தியபோது, தலிபான்களின் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 பொதுமக்களை விடுவித்தனர்.

    அவர்கள் பத்திரமாக ராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 
    தலிபான்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் இருந்து ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அப்துல் ரஷித் தோஸ்ட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். #AbdulRashidDostum #AfghanistanVP #assassinationbid #Talibanassassinationbid
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் 2000-ம் ஆண்டு துவக்கத்தில் தலிபான்கள் பயங்கரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் அவர்களின் கொட்டத்தை அடக்கி பலரை சிறைபிடித்ததில் முக்கிய பங்காற்றியவர் முன்னாள் ராணுவ தளபதி அப்துல் ரஷித் டோஸ்ட்டும்.

    சுமார் 2 ஆயிரம் தலிபான்களை கொன்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், ரஷித் டோஸ்ட்டும் இதை மறுத்து வருகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலுடன் முதன்முறையாக துணை அதிபர் பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற டோஸ்ட்டும் ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் துணை அதிபராக பதவியேற்றார்.



    சில ஆண்டுகள் துருக்கி நாட்டில் வாழ்ந்துவந்த அப்துல் ரஷித் டோஸ்ட்டும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காபுல் நகர விமான நிலையத்தின் அருகே இவரை கொல்ல நடந்த தற்கொலப்படை தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்நிலையில், ஜாவ்ஸான் மாகாணத்தில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை அதிபர் டோஸ்ட்டும் வந்த வாகனத்தின்மீது நேற்று தலிபான் பயங்கரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அவர் உயிர் தப்பியதாகவும் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #AbdulRashidDostum #AfghanistanVP #assassinationbid #Talibanassassinationbid
    ×