search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலைக்கு"

    • இந்நிலையில் நேற்று காலை வெங்கடேசன் உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். நேற்று மதியம் திடீரென வெங்கடேசன் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ஈ.வி.என். ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். வெங்கடேசனை தற்கொ–லைக்கு தூண்டியதாக மாரிமுத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம், சிந்தன் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (42). பழைய இரும்பு வியாபாரி. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வெங்கடேசன் உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். நேற்று மதியம் திடீரென வெங்கடேசன் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ஈ.வி.என். ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரிடம் அவர்களது உறவினர்கள் கூறும்போது,

    சம்பவத்தன்று இரவு வெங்கடேசன் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த போது உறவினர் மாரிமுத்து என்பவர் மது குடிப்பதற்கு அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் அவரைப் பற்றியும், அவரது குடும்பத்தை பற்றியும் மாரிமுத்து தரக்குறைவாக பேசியுள்ளார்.

    அதன் பின் வெங்கடேசன் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டிற்கும் வந்த மாரிமுத்து மீண்டும் தரகுறைவாக பேசி உள்ளார். இதனால் மன உளைச்சலில் வெங்கடேஷ் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    இதையடுத்து மாரிமுத்துவை பிடிக்க 2 தனிப்படை அமைக்க ப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். வெங்கடேசனை தற்கொ–லைக்கு தூண்டியதாக மாரிமுத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

    • சகோதரிக்கும் திருமணமாகி குழந்தை இல்லை. அவரும் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் விரக்தியடைந்து குமார் தற்கொலைக்கு முயன்றார்.
    • இதையடுத்து தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (23). கார்பெண்டர். இவர் சிறிய வயதாக இருக்கும்போதே அவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் குமார் அவரது சகோதரியின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    சகோதரிக்கும் திருமணமாகி குழந்தை இல்லை. அவரும் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதன்கார ணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த குமார் நேற்று இரவு சூளை அருகே உள்ள குரங்கன்பள்ளம் ஓடையில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது கம்பியில் சிக்கி கொண்டார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×