என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தருமபுரியில் சுதந்திர தினவிழா"
- மாற்றுத்திறனாளி நலத்துைற சார்பில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 2 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
- மொத்தம் ரூ.1 கோடியே 81 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா இன்று காலை நடந்தது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாவட்ட எஸ்.பி. கலைசெல்வன் கலந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் வருவாய்த்துறை சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் 10 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.13 லட்சத்து 86 ஆயிரத்து 450 மதிப்பில் 5 பயனாளிகளுக்கும், தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 5 பயனாளிகளுக்கும், மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ. 1 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 5 சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கும், மருத்துவ ஊரக நலத்துறை சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் 5 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளி நலத்துைற சார்பில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 2 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடர் வீட்டு வாரிய மேம்பாட்டுத்துறை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் 4 பயனாளிகளுக்கும், மகளிர் திட்டம் சார்பில் ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் ஒரு பயனாளிகளுக்கும் என மொத்தம் ரூ.1 கோடியே 81 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, தருமபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன், சப்-கலெக்டர் சித்ரா விஜயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கலால்) தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்