என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தரிசு நிலங்கள்"
- கரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திட வேளாண்மைதுறைக்கு ரூ.27.2 லட்சமும், தோட்டக்கலைத்துறைக்கு ரூ.17.5 லட்சமும், வேளாண்மை பொறியியல் துறைக்கு ரூ.743.4 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
- தமிழகம் முழுவதும் 10 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு வேளாண்பணிகள் மேம்பட உள்ளது இதன் மூலம் 70 லட்சம் விவசாயிகள் பயனடைய உள்ளார்கள்.
கரூர்:
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் 2021-2022 ஆண்டுக்கான 46 ஊராட்சிகளிலும், நடப்பாண்டு தேர்வு செய்யப்பட்ட 29 ஊராட்சிகளும் என மொத்தம் 75 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
கரூர் மாவட்டத்திற்கு இத்திட்டத்தில் ரூ.7.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசு நிலப்பகுதியில் மண் ஆய்வு நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்படும். நீர்வளம் ஆதாரம் இருப்பின் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்சார வசதி அல்லது சூரியசக்தி பம்பு செட் மூலம் நீர் வசதி செய்து நீர் பங்கீடு முறைப்படி உகந்த பயிர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் 1859 ஏக்கர் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், நிலத்தடி நீர் இல்லாத இடங்களில் பண்ணை குட்டைகள் அமைத்து முதல்வரின் மானாவாரி மேம்பாடு திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களில் இணைத்து நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் 200 குடும்பங்களுக்கு 3 தென்னங்கன்றுகள், 15 நபருக்கு உளுந்து, துவரை தலா 5 கிலோ வழங்கப்படும்.
இத்திட்டத்தினை கரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திட வேளாண்மைதுறைக்கு ரூ.27.2 லட்சமும், தோட்டக்கலைத்துறைக்கு ரூ.17.5 லட்சமும், வேளாண்மை பொறியியல் துறைக்கு ரூ.743.4 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. .தமிழகம் முழுவதும் 10 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு வேளாண்பணிகள் மேம்பட உள்ளது இதன் மூலம் 70 லட்சம் விவசாயிகள் பயனடைய உள்ளார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்