search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பி கொலை"

    • ராஜ் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார்.
    • ராஜ் மாயமானது குறித்து திருவல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருவலம் பகுதியை சேர்ந்தவர் பேபி. இவரது மகன்கள் பினு மற்றும் ராஜ். இருவரும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்திருக்கின்றனர்.

    ராஜ் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார். ஆனால் பினு அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்திருக்கிறார். இதன் காரணமாக சகோதரர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஓணம் பண்டியை முடிந்த ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் ராஜ் திடீரென மாயமானார். வீட்டில் இருந்து வந்தவர் திடீரென எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் அவரது தாய் தவித்தார். அவர் தனது மகனை உறவினர்களின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடினார்.

    ஆனால் ராஜை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை பற்றி தனது மற்றொரு மகனான பினுவிடம் தாய் பேபி கேட்டிருக்கிறார். ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார். ஆகவே ராஜ் மாயமானது குறித்து திருவல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். ராஜின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாயமான ராஜ் மற்றும் அவரது அண்ணன் பினு ஆகிய இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்த தகவலை போலீசாரிடம் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

    இதனால் பினுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது வீட்டின் பின் பகுதியில் தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் புதிதாக மாமரக்கன்று நடப்பட்டிருப்பது குறித்து பேபி உள்ளிட்டோரிடம் போலீசார் கேட்டனர்.

    ஆனால் மரக்கன்று நடுவதற்காக பல மாதங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டதாகவும், அதில் எப்போது, யார் மரக்கன்றை நட்டார்கள்? என்பது குறித்து தனக்கு தெரியாது என்று பேபி கூறியிருக்கிறார். இதனால் பினு மீது போலீசாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது.

    அவர் ராஜை கொன்று புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பினுவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தனது தம்பியை அடித்துக்கொன்று, உடலை வீட்டின் பின்பகுதியில் தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் போட்டு புதைத்து, அதன் மீது மாமரக்கன்றை நட்டதாக தெரிவித்தார்.

    இதனைக்கேட்டு போலீசாரும், குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின்போது பினுவுக்கும், ராஜூக்கும் தகராறு நடந்திருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த பினு, தம்பி ராஜை தாக்கியுள்ளார். இதில் அவர் இறந்துவிட்டார்.

    அப்போது வீட்டில் யாரும் இல்லாததால், யாருக்கும் தெரியாமல் தம்பியின் உடலை வீட்டின் பின் பகுதியில் ஏற்கனவே தொண்டப்பட்டிருந்த குழியில் போட்டு புதைத்திருக்கிறார். அதனை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக, தம்பியின் உடலை புதைத்த குழியில் புதிய மாமரக்கன்றை நட்டு வைத்திருக்கிறார்.

    மேற்கண்ட தகவல்களை போலீசாரிடம் பினு தெரிவித்திருக்கிறார். இதையடுத்து பினுவை போலீசார் கைது செய்தனர். அவர் கூறியதன் அடிப்படையில் ராஜ் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் தோண்டினர்.

    அப்போது குழிக்குள் ராஜின் உடல் இருந்தது. உடல் புதைக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆவதால், சற்று அழுகி காணப்பட்டது. ராஜின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடன்பிறந்த தம்பியை அவரது அண்ணனே அடித்துக்கொன்று, உடலை வீட்டு வளாகத்தில் குழிதோண்டி புதைத்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காதணி விழா நடந்த முருகனும், அவரது மனைவி நந்தினியும் திட்டமிட்டனர்.
    • மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த விநாயகம், முருகனின் மார்பில் குத்தினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 36) சலூன் கடை நடத்திவந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண்குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். ஆடி மாதம் பிறந்ததால், குழந்தைகளுக்கு காதணி விழா நடந்த முருகனும், அவரது மனைவி நந்தினியும் திட்டமிட்டனர். இதற்காக குலதெய்வம் கோவிலுக்கு இன்று சென்று வழிபாடு நடத்தி மொட்டையடிக்க திட்டமிட்டனர். இதற்காக உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து வந்தனர்.

    இதையடுத்து தனது சகோதரரான விநாயகத்தை (40) அழைப்பதற்காக அவரது வீட்டிற்கு முருகன் நேற்று சென்றார். அவரும் சலூன் கடை நடத்தி வருகிறார். சலூன் கடைகள் பெரும்பாலும் செவ்வாய்கிழமைகளில் இயங்காது. இதனால் விநாயகம் நன்கு குடித்துவிட்டு வீட்டிலிருந்தார். அப்போது முருகனு க்கும், விநாயகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறியது. இதில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த விநாயகம், முருகனின் மார்பில் குத்தினார். இதில் சம்பவ இடத்தி லேயே முருகன் துடிதுடித்து இறந்துபோனார்.


    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முருகனின் அண்ணன் விநாயகம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். குழந்தைகளின் காதணி விழாவிற்கு அழைக்க வந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி யையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வீரமுத்து பரிதாபமாக இறந்து போனார்.
    • போலீசார் வீரமுத்துவின் அண்ணன் மாரிமுத்துவை கைது செய்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் சத்யா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன்கள் மாரிமுத்து (வயது 35), வீரமுத்து (32). பூம் பூம் மாட்டுக்காரர் இனத்தை சேர்ந்த இருவருமே திருமணமானவர்கள். இதில் வீரமுத்து லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு ஜெயங்கொண்டானில் இருந்து தனது வீட்டுக்கு வீரமுத்து நடந்து சென்றார். அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் வீரமுத்து சரிந்தார். அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்த வீரமுத்துவை 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வீரமுத்து பரிதாபமாக இறந்து போனார். இது தொடர்பான புகாரின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், வீரமுத்து அவரது அண்ணன் மாரிமுத்து மனைவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து வீரமுத்துவை வீட்டுக்கு வரும்போது வழி மடக்கி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் வீரமுத்து இறந்து போனது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வீரமுத்துவின் அண்ணன் மாரிமுத்துவை கைது செய்தனர். அவர் தனியாக இந்த செயலில் ஈடுபட்டாரா?, அல்லது வேறு யாருடனும் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சகோதரர்கள் இருவரும் ஒன்றாக ஆடு மேய்க்க சென்றுவிட்டு, சந்தையில் ஆடுகளை விற்று விட்டு வந்தனர்.
    • அண்ணன், தம்பி இருவருக்கும் ஆடு விற்பதில் திடீரென்று சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த நெம்பர் 1 டோல்கேட் அருகிலுள்ள தாளக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயன்-மாரியாயி தம்பதியினர். இவர்களுக்கு முத்தையா (வயது 30), கோபி (27) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.

    அவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அவ்வப்போது கோபி மட்டும் கூலி வேலைக்கும் செல்வார். இதில் முத்தையா சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இவர் சில நேரங்களில் தனது தாய் மட்டும் அல்லாது அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளையும் அடித்து வந்ததாக கூறப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட முத்தையா அவரது தாய் மரியாயை அடித்துள்ளார். இதனால் அண்ணன் தன்னையும் அடிக்க கூடும் என கருதிய கோபி வீட்டில் படுக்கையறையில் தூங்காமல் மொட்டை மாடியில் சென்று படுத்து வந்தார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

    இந்தநிலையில் நேற்று அதிகாலையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றாக ஆடு மேய்க்க சென்றுவிட்டு, சந்தையில் ஆடுகளை விற்று விட்டு வந்தனர். இந்தநிலையில் அண்ணன், தம்பி இருவருக்கும் ஆடு விற்பதில் நேற்று திடீரென்று சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் இரவு வழக்கம் போல் வீடு திரும்பிய அவர்கள் சாப்பிட்டு விட்டு, வீட்டின் மாடியில் தூங்க சென்றனர். அப்போதும் அவர்களுக்கிடையே தகராறு உருவானது. பின்னர் அவர்கள் தூங்க சென்றனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த முத்தையா தம்பி என்றும் பாராமல், தூக்கத்தில் இருந்த கோபியை இரும்புக் கம்பியால் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த கோபி மண்டை உடைந்து மூளை சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம், சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தம்பியை கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட முத்தையாவையும் கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் நான் கொலை செய்யவில்லை என கூறினார். அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை அண்ணன் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆத்திரத்தில் தம்பியை குத்திக்கொலை செய்ததை எண்ணி வருத்தப்பட்டு 30 மணி நேரம் தம்பியின் பிணத்தின் அருகிலேயே நரசிம்ம ராஜு உட்கார்ந்து கொண்டு இருந்தார்.
    • வீட்டை விட்டு வெளியே வந்த நரசிம்ம ராஜு அங்கிருந்தவர்களிடம் தம்பியை குத்தி கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கணபவரம், கொல்லலடியப்பா பகுதியை சேர்ந்தவர்கள் நரசிம்ம ராஜு (வயது 70). இவரது தம்பி ராமகிருஷ்ண ராஜு (68). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. பெற்றோர்கள் இறந்து விட்டதால் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    விவசாய கூலி வேலை செய்து வந்த நரசிம்மராஜுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    மேலும் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நரசிம்மராஜு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி தனது தம்பியிடம் அழுது புலம்பினார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ராமகிருஷ்ண ராஜு உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டை விட்டு போக வேண்டியது தானே. வீட்டில் இருந்து கொண்டு ஏன் தொல்லை கொடுக்கிறாய் என கூறினார்.

    இதனால் தம்பி மீது கோபத்தில் இருந்த நரசிம்மராஜு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தூங்கிக்கொண்டு இருந்த தம்பியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ராமகிருஷ்ணராஜு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ஆத்திரத்தில் தம்பியை குத்திக்கொலை செய்ததை எண்ணி வருத்தப்பட்டு 30 மணி நேரம் தம்பியின் பிணத்தின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

    நேற்று பிணத்தில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த நரசிம்ம ராஜு அங்கிருந்தவர்களிடம் தம்பியை குத்தி கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமகிருஷ்ணராஜுவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து நரசிம்மராஜுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×