search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழிசை சவுந்தராஜன்"

    ஊழல் குற்றசாட்டு சொன்ன உடன் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #Edappadipalaniswami
    சேலம்:

    பா.ஜனதா மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி மீடூவில் பாலியல் குற்றசாட்டு வைத்துள்ளார். இது குறித்து தி.மு.க, ம.தி.மு.க கம்யூனிஸ்ட் காங்கிரஸ் சேர்ந்த தலைவர்கள் எந்தவித கருத்தும் சொல்லவில்லை. ஆனால் எஸ்.வி சேகர் இன்னொருவர் பதிவை பேஸ்-புக்கில் பகிர்ந்தார். ஆனால் அவரை பலர் நேரடியாக குற்றம் சாட்டினார்கள். தமிழகத்துக்கு மத்திய அரசு திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறிவருகிறார். மத்திய அரசு சார்பில் தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக நெல்லை, மதுரை, தஞ்சை ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு 150 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 600 கோடி ரூபாயில் தடுப்பூசி தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து பெண்களும் செல்லலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பண்பாட்டை சீர்குலைக்கும் செயலாகும். இது தொடர்பாக அமைதியாக நடக்கும் போராட்டங்களுக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்து வருகிறது.


    முதல்- அமைச்சர் மீதான குற்றசாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும், ஊழல் குற்றசாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்று அவசியம் இல்லை.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து வருகிறது. முடிந்தவுடன் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார். பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவர் எந்த அதிகாரத்தில் இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.   #BJP #TamilisaiSoundararajan #Edappadipalaniswami
    பா.ஜ.க. கூட்டணிக்கு யாரையும் இதுவரை அழைக்கவில்லை என்று மதுரை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan
    அவனியாபுரம்:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை கடந்த 6 மாதமாக மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். அதில் எந்தெந்த பொருட்களுக்கு வரிகள் குறைக்க வேண்டும் என்று ஆலோசனைகள் நடத்தப்பட்டு சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. வரி வசூலிப்பதில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    பிரதமர் மோடி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தபோது வாக்குறுதி அளித்தபடி தற்போது ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளார். இதனால் அந்த நாட்டு மக்களின் பாராட்டை பெற்றிருக்கிறார். இதில் எதிர்மறைகள் இருந்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.


    மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்றே போதும். அது மதுரை மக்களின் பாராட்டை பெறுவதற்கு போதுமானதாகும்.

    அமித் ஷா ஆலோசனையின் பேரில் மதுரையில் இன்று பா.ஜ.க. மகளிர் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் சென்னை முதல் குமரி வரையிலான நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டால் பா.ஜ.க.வின் பலம் உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டி.டி.வி. தினகரன் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறியிருக்கிறாரே? என்று கேட்டதற்கு, தமிழகத்தில் தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி பற்றி தெரிவிக்கப்படும். பா.ஜ.க. ஊழலற்ற ஆட்சியை தருவது என்ற கொள்கையுடைய கட்சியாகும். எங்கள் கூட்டணிக்கு யாரையும் இதுவரை அழைக்கவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்தார். #BJP #TamilisaiSoundararajan
    ×