search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழிசை சவுந்தரராஜான்"

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும் என மாணவி சோபியாவுக்கு ஆதரவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். #Sophia #Narayanasamy
    புதுச்சேரி:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.

    அதே விமானத்தில் பயணம் செய்த கனடா நாட்டில் பயிலும் முனைவர் பட்ட மாணவி சோபியா பாரதிய ஜனதாவை விமர்சித்து முழக்கமிட்டார். இதுபற்றி விமானம் இறங்கிய பின்னர் அந்த மாணவியிடம் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டார்.

    இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவி சோபியா மீது தமிழிசை சவுந்தரராஜன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவி சோபியாவை கைது செய்தனர். கோர்ட்டு அவரை விடுவித்தது.


    மாணவி சோபியாவுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும். மக்களின் குரலை ஒடுக்க கூடாது. இது ஜனநாயகம் இல்லை. அது சர்வாதிகாரமாகி விடும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார். #Sophia #Narayanasamy
    தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் மீது கொடுத்த புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்று மாணவி சோபியாவின் தந்தை கூறியுள்ளார். #sophiaantipolis
    தூத்துக்குடி:

    ஆராய்ச்சி மாணவி சோபியாவின் தந்தை டாக்டர் சாமி தூத்துக்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது மகள் சோபியா கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். கடந்த 30-ந்தேதி சோபியா சென்னை வந்தார். நானும், எனது மனைவியும் சென்னையில் இருந்து எனது மகளை அழைத்துக்கொண்டு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தோம்.

    விமானத்தில் இருந்து இறங்கும்போது எனது மகள் பா.ஜ.க அரசை கண்டித்து முழக்கமிட்டார். இதனை கேட்ட பா.ஜ.க தலைவர் தமிழிசை அப்போது எதுவும் சொல்லாமல் விமான நிலையத்தில் பயணிகள் அமரும் இடத்துக்கு வந்ததும் தனது கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து அவதூறாக பேசி மிரட்டினார்கள்.

    எனது மகள் மீது காவல்துறை 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவளுக்கு வயிற்றுவலி என்பதால் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

    மேலும், பா.ஜ.க வினர் மீது நாங்கள் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. புகார் கொடுத்ததற்கான ரசீதும் கொடுக்கவில்லை. எனவே இதுபற்றி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது வக்கீல் அதிசய குமார் உடனிருந்தார். #Sophia #sophiaantipolis
    ×